rudrateswarar

rudrateswarar

Wednesday, February 5, 2014

சிவ தீக்ஷை

                                                   ஓம் நமசிவாய
   
தீட்சை 
தீட்சை தமிழில் தீக்கை ,தீக்கை என்றால் உயிரைப்பற்றிய அறியாமை என்னும் ஆணவ மலத்தைக் கெடுத்து முக்தி என்னும் வீடுபேறு அடையும் சிவஞானத்தை கொடுப்பது . 
உடலுக்கு பலசடங்குகள் செய்யப்படுகின்றன அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யும் சடங்கே தீட்சை. உடல் அழியும் , ஆனால் உயிர் நித்தப்பொருள் அழியாதது . எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவசம்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஆரம்ப படி நிலை தீட்சை அதை உறுதிபடுத்திகொள்ள, இம்மை மறுமை இன்பங்கள் அடைய சிவபெருமான் திருவருள் பெற உரிமம் (தீட்சை) தேவை .
 
எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீட்சை பெறலாம். தீட்சை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர் அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  திரிபுண்டரமாக  பூச முடியாது . நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி .எனவே குரு மூலம் தீட்சை பெற வேண்டும் நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு சட்ட விதி பிரமாணம் .அகத்தியரிடம் ஸ்ரீராமனும் உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணனும்   சிவ தீட்சை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள்   

ஏன் தீட்சை  பெற வேண்டும் :
 1.  சிவ பெருமானை ஆகமங்களில் விதித்தபடி  வழிபாடு செய்ய ,ஐந்தெழுத்து ஓத முப்புரிமாணமாக  திருநீறு அணிய அதிகாரம் கிடைக்கிறது . சிவபூசை செய்யும் அளப்பரிய பேறு கிட்டும் 
 
2. தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 
3.சமய தீட்சை பெற்றாலே அந்த உயிரை எமன் எடுக்க  மாட்டான்.அவனுக்கு அந்த அதிகாரம் இல்லை .  அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
 
4.விசேட தீட்சை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
 
5.நிர்வாண தீட்சை பெற்ற உயிரை சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
 
6.எமன் வாங்காததால்  நரகலோக ஆவியுலக துன்பம் இல்லை
 
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
 
8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார்.
 
9.செய்வினை பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
 
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது மாரடைப்பு வராது 
 
11.சிவோகம் பாவனை  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப் படுத்தும் 
 
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
 
13.முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
 
14. தீட்சையின் பெற்று  ஆன்மார்த்த பூஜை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் எனும் சஞ்சிதம் ). ஆகாமியம் ஏறாது (நிகழ் காலபாவங்கள்)
  

   
                                    போற்றி ஓம் நமசிவாய .


                                திருச்சிற்றம்பலம்