rudrateswarar

rudrateswarar

Saturday, February 20, 2016

தீக்ஷை பெற மறுப்பவர்கள்

                                                   ஓம் நமசிவாய

தீக்ஷை பெற மறுப்பவர்கள் 

   தீக்ஷை பெறாதவர்கள் , பெறாததற்கு  சொல்லும் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் 

1.ஆலய வழிபாடே போதும் தனியாக தீக்ஷை வாங்கி பூசை  செய்யவேண்டும் என்று அவசியமில்லை 

2.சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை .

3.எனக்கு தீக்ஷை  அளிக்கும் அளவுக்கு இன்னும் குரு கிட்டவில்லை 
ஏற்கெனவே நான் நிறைய படித்துள்ளேன் 

4.செத்தபிறகு தானே இதன் பலன் கிடைக்கும் நாம் உட்கார்ந்து பார்க்கவா போகிறோம். செத்தபிறகு சிவலோகம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை . இப்ப இந்த பிறவியில் என்ன கிடைக்கும் 

5.நாயன்மார்கள் தீக்ஷை பெறவில்லையே. நாயன்மார்கள் தீக்ஷை பெற்றதாக சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் எங்கும் கூறவில்லையே

6.தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே இறைவன் ஞானத்தை வழங்குவான் என்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது .
அவர் கடவுளாக இருக்கமுடியாது 

7.தீக்ஷை பெறுவானேன் அதை (அந்தியேஷ்டி )பின்னர் இறக்குவானேன்

8.அனுட்டானம் மற்றும் பூசை கிரியை செய்ய நேரமில்லை  எனக்கு தொழில் அந்தமாதிரி உள்ளது

9.அதற்கான வயது வரவில்லை அல்லது வேளை வரவில்லை 

10.நான் திருமுறைகளைப் படிக்கிறேன் தினம் நமசிவாய மந்திரம் சொல்கிறேன் அதுவே போதும் தீக்ஷை தேவையில்லை

11.நான் அசைவம் சாப்பிடுகிறேன் . அதை நிறுத்த முடியவில்லை 
அல்லது நிறுத்த முடியாது

12.ஒரு குருவிடம் தீக்ஷை வாங்கினால் அவரிடம் அடிமை போல இருக்கவேண்டும்  ஒவ்வொன்றுக்கும் அவரிடம் அனுமதி கேட்கவேண்டும் அதெல்லாம் நமக்கு சரிப்படாது  

இப்படி அடியேன் அறிந்த வகையில் அன்பர்கள் பல பேர் மேற் சொன்ன சப்பைக் காரணங்களைச்  சொல்லிக்கேட்டுள்ளேன் . 

இதற்கு என்ன தீர்வாக இருக்கமுடியும் ? . எப்படி விளங்க வைத்து ஆன்மாக்களை பக்குவப்படுத்துவது?  நெறிப்படுத்துவது?

இதைப் படிக்கும் மெய்யன்பர்கள் இதற்கு தக்க விடை அருளுமாறும்     விடைமேல் வரும் எம்பெருமானையும் வேண்டிக்கொள்கிறேன் 

உங்கள் பின்னூட்டம் காண விழைகிறேன் 

சிவனடிமைவேலுசாமி 


                                         போற்றி ஓம் நமசிவாய 


                                                திருசிற்றம்பலம்    

Thursday, February 18, 2016

யார் தருவார் மந்திர உபதேசமும் சிவதீக்ஷையும்

                                                  ஓம் நமசிவாய

யார் தருவார் மந்திர உபதேசமும் சிவதீக்ஷையும் 


யார் தருவார் மந்திர உபதேசமும் சிவதீக்ஷையும் என்ற உங்கள் தேடுதலுக்கும் ஏக்கத்திற்கும் இதோ விடை கிடைக்கப்போகிறது 
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் ஆன்மாவைக் 
கடைத்தேற்றுமாறு அழைக்கிறோம் 
தீக்ஷை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிபடுத்திக்  கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் (தீக்ஷை) தேவை .
 
எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை பெறலாம். தீக்ஷை  பெறாமல் சிவத்தை வழிபடுபவர் பொதுச்சைவர் எனப்படுவர். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  முப்பரிமாணமாக (திரிபுண்டரமாக)  பூச முடியாது . நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி .எனவே குரு மூலம் தீக்ஷை பெற வேண்டும் .நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் .ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் 
ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு  முனிவரும் சிவதீக்ஷை  செய்து வைத்துள்ளார்கள்   

ஏன் தீக்ஷை  பெற வேண்டும் 
 1.  சிவ பெருமானை ஆகமங்களில்  விதித்தபடி  வழிபாடு செய்வதற்கு உரிய  அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக  திருநீறு அணிந்து பூசை செய்யலாம் . 
2. தீக்ஷை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 
3.சமய தீக்ஷை பெற்றாலே அவர்களை  எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீக்ஷை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம்  ஆவி உலக துன்பங்கள் நம்மை அணுகாது .
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார் 
9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .
11.சிவோகம் பாவனைகள்  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .
அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
13. முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
14. தீக்ஷை பெற்று  ஆன்மார்த்த பூசை  செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம்  ). ஆகாமியம் ஏறாது 
  

   
                            போற்றி ஓம் நமசிவாய .


                            திருச்சிற்றம்பலம் 

Friday, February 5, 2016

மகாபிரதோஷம்

                                                 ஓம் நமசிவாய 



மகாபிரதோஷம் 



பிரதோஷ நேரம்  என்பது சிவபெருமான் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலம் உண்டு உயிர்களை காத்த நேரம்  சூரியன் மறைவதற்குமுன் ஒன்றரை மணி நேரம் மறைவதற்கு பின் ஒன்றரை மணி நேரம் அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் 7.30 மணி வரை . இது சிவனை வழிபட ஏற்ற  புண்ணிய காலம் இறைவன் ஆலகால விடம் உண்ட அயர்ச்சி மேலிட இருப்பது போல் இருந்தார். அந்நேரம்  என்ன ஆகுமோ என்று மூவரும்  தேவர்களும் அன்னையும் தவித்தனர்
  
அப்பொழுது ஜீவராசிகள் அனைத்தும் உய்வு  பெறவும் புத்துணர்ச்சி வழங்கும் பொருட்டும்  மகாதேவரான எம்பெருமான் நந்தியெம் பெருமானின் இரு கொம்புகளுக்கிடையே எழுந்தருளி திருநடனம் புரிந்தருளினார் . உயிர்களின் இயக்கம் சீராகவும் அவர்கட்கு உற்சாகம் அளிக்கவும் கருணைக்கடல் திருநடனம் புரிந்தார் ஆகவே குறைபாடான அதாவது குறை நிகழவேண்டிய அந்த நேரத்தில் நாம் இறைவனை வழிபட நம் குறை களைந்து துயர் துடைப்பான்,அந்த நேரத்தில் சகல தேவர்களும்  மால் அயன் தேவர்கள் உள்ளிட்ட அனைத்து  ஜீவராசிகளும் சிவனை துதித்து வணங்கிப் பேறு பெறுகின்றன . எனவே அரிய மானுடப் பிறப்பாகிய நாமும் சிவனையும் நந்தியெம்பெருமானையும்  அபிஷேகித்து, அர்ச்சித்து , ஆராதித்து  ஐந்தெழுத்து செபித்து தொழுது  வலம் வந்து  நமது ஆன்மா எனும் உயிரை புத்துணர்வு செய்து கொள்ளலாம்

பிரதோஷ காலங்கள் ஐந்து வகை.

1.நித்திய பிரதோஷம்,
2.பட்ச  பிரதோஷம்,
3.மாத பிரதோஷம்,
4.மகா பிரதோஷம்,
5.பிரளயப் பிரதோஷம்.

தினமும் மாலை வேளையில் வருவது நித்ய பிரதோஷம் எனவும், வளர்பிறையில் வரும் பிரதோஷம் பட்ச பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், சனிக்கிழமைகளில் வருவது மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வருவது  பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்ய வழிபட மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.பெருமான் நஞ்சை உண்டு உலக உயிர்கள் அனைத்திற்கும் ஒருங்கே அருள் பாலித்த நேரம்

பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. அதாவது பகல் முடிந்து இரவு துவங்கும் அந்த சந்தியாகாலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் தத்தம்  கூட்டில் ஒடுங்குகின்றன பின் உறங்குகின்றன அதாவது அங்கு மறைத்தல் தொழிலை இறைவன் நிகழ்த்துகிறார் அதன் பொருள் உயிர்கள் தமது சக்தியை  இழக்கின்றன ஏன் ? சூரியன் என்ற திருவருள் வெளிச்சம் முடிந்து இருள் எனும் மாயை உயிர்களை பற்றுகிறது அவ்வேளையில் நாம் இறைவனை வணங்கி வழிபட்டு இழந்தவற்றை மீட்டுக்கொள்ள உகந்த வேளை பிரதோசவேளை  எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.பிரதோஷ நேரத்தில் சிவபெருமான்  எல்லாவற்றையும் தன்னுள்ளே  அடக்கிக் கொள்கிறார்

பிரதோஷ நேரத்தில் சிவனின் ஆனந்த நடனத்தை மால்அயன் இந்திராதிதேவர்களும் முனிவர்களும் கண்டுகளிக்கிறார்கள்
 

சிவபெருமான் விஷம் உண்ட நிகழ்ச்சி நடந்தது ஒரு திரயோதசி திதி சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது அன்று நாம் வழிபடுவது ஐந்து ஆண்டு சிவாலய தரிசனம் செய்ததற்கு சமமானது என்று பெரியவர்கள் சொல்லியுள்ளார்கள்
 

பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.பிரதோஷ நேரத்தில் சிவாலயம் செல்ல  இயலாவிட்டாலும், ஈசுவரனை மனதில் தியானித்துக்  கொண்டால் நினைத்தது நடக்கும்.

இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவி சாயா தேவி எனும் பிரத்யுஷாதேவி அவள் பெயரால் அந்த நேரம் சாயங்காலம் அல்லது பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டு  நாளடைவில் பிரதோஷ காலம் ஆகிவிட்டது.

பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் நற்பலன்கள் கிட்டும்
ஒரு சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வர, ஈசுவரனிடம் நாம்  வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
பிரதோஷ நாட்களில் தவறாது விரதமிருந்து வழிபட கடன், வறுமை, நோய், பயம், மரணபயம் கோள்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.கல்விச்செல்வம் பொருட்செல்வம் மக்கட்செல்வம் தொழில்வளம் நோயற்ற வாழ்வு நிம்மதி எல்லாம் கிடைக்கும் 

பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.


ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது. ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை கொண்டு பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது என்ன ? செய்யக்கூடாதது என்ன ?

செய்ய வேண்டியதை செய்யாமல் இருக்கலாம் ஆனால் செய்யக்கூடாததை செய்யாமல் இருக்க வேண்டும் அல்லவா?


செய்யத்தகாதவை 

 1.உணவு அருந்தக்கூடாது முடிந்தால் நீர் பருகுவதை கூட தவிர்க்கலாம். கோவில் பிரசாதம் கூட பிரதோஷ காலம் முடிந்த பின் எடுத்துக்கொள்ளலாம்.திருவிளையாடல் புராணத்தில் இறைவன் மேல் விழுந்த அடி அனைத்து உயிர்களின் மேல் விழுந்தது எனவே இறைவன் நஞ்சு உண்ட காலத்தில் நாம் அருந்தும் உணவு விஷத்திற்கு சமம் .

 2.உறக்கம் தவிர்க்க வேண்டும்          (மற்ற நாட்களிலும் 4.30 to 7.30மணி வரை ) இதைத்தான் நம் வீட்டு பெரியவர்கள் மாலை நேரம் விளக்கு வைக்கிற நேரம் படுக்க கூடாது என்பார்கள்
 
3. அதிகமாக அலங்கரித்துக் கொள்ளக்கூடாது  
 
4.ஆலயம் சென்றால் அரட்டை அடித்தல் கூடாது . ஊர்க்கதை பேசும் இடமல்ல அது அங்கு அரன் நாமம் அன்றி வேறு பேசக் கூடாது    

 5.மலஜலம் கழிப்பதை முன் கூட்டியே முடித்துக் கொள்ளவேண்டும்
  
6.ஒன்றுக்கொன்று முண்டியடித்து தகராறு செய்வது அடியோடு கூடாது  பொறுமையுடன் அமைதி காக்க வேண்டும்
  
7.பக்தி பாடல் என்ற பெயரில் சினிமா பாடல்  பாட கூடாது 
 
8.கண்ட இடங்களில் விழுந்து வணங்க கூடாது கொடிமரத்தின் அருகில் மட்டுமே விழுந்து வணங்கவேண்டும் 
 
9.சண்டிகேசுவரர் சந்நிதியில்நூல்போடுவதும்  சத்தமாக கை தட்டுவதும் கூடாது. எந்நேரமும் சிவநிஷ்டையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்வது சிவாபராதமாகும்
 
10.அன்று நாள் முழுதும் இரவு வரை விரதம் இருக்காமல் இருந்தாலும் பரவாயில்லை .தவறியும் அசைவம் கூடாது   
 
11.தீட்சை பெற்றவர்கள் தங்களது நித்ய கடமையான அனுஷ்டானம்சந்தியாவந்தனம் பூஜை போன்ற கிரியைகளை அந்த நேரத்தில் செய்யகூடாது
 
12.ஆலயங்களில் உள்ள மூர்த்தங்களைத்  தொட்டு வணங்க கூடாது . குறிப்பாக நந்தியின் காதுகளில் சொல்வதை தவிர்க்க வேண்டும் . ஆணவமலமுள்ள அசுத்த மாயா காரியமான நம் பூத உடம்பின் எச்சில் வாயால் ஞானவடிவான நந்தியின் காதில்  வேண்டாத வற்றை  கோரிக்கை என்ற பெயரில் சொல்வது கொடிய பாவசெயல் எனவே இது முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று .        



செய்யத்தகுந்தவை  

 
1.பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகிய திருநீறு உருத்திராட்சம்  அணிந்து உள்ள சுத்தியோடு ஆலயம் செல்ல வேண்டும்.
 
2.வெறுங்கையோடு எப்பொழுதும் ஆலயம் செல்லாமல் பூ வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வில்வம் என நம்மால் முடிந்த ஒன்றை கொண்டு செல்லவேண்டும்.
 
3.அபிசேகப்பொருட்கள்,திரவியங்கள் பால் தயிர் பன்னீர் ,மஞ்சள் , திருமஞ்சனம்,சந்தனம், தேன் இளநீர்  கொடுக்கலாம் 
 
4.ஆலயத்தை தூய்மை செய்து கொடுக்கலாம்
 
5.சிவபுராணம் ,லிங்காஷ்டகம் ,திருமுறை பதிகங்களை பண் தெரியா விட்டாலும் நமக்கு தெரிந்தவகையில் பாடலாம் 
 
6.மேற்சொன்ன பாடல்கள் தெரியாது என்றால் வருத்தம் தேவையில்லை மிக எளிய பரம கருணா மூர்த்தியின் மூல மந்திரம்   ஓம் நமசிவாய   சொல்லுங்கள், அதைவிட  உலகில் உயர்ந்த மந்திரம் ஒன்றுமில்லை
 
7.கிழக்கு மேற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் வடக்கு பார்த்தும் வடக்கு தெற்கு பார்த்த கோவில்களாக இருந்தால் கிழக்கு பார்த்தும் தலைவைத்து கொடிமரம் பலி பீடத்திற்கு அருகில் மட்டுமே  வணங்க வேண்டும்
 
8.சண்டிகேஸ்வரரை வணங்கி சிவதரிசன பலன்களை தந்தருளுங்கள் என்று வேண்டிக் கொள்ளவேண்டும் 
 
9.ஓம் நமசிவாய சொல்வதற்கு ஜப மாலை இல்லை எப்படி 108 முறை கணிப்பது என்று குழப்பம் தேவையில்லை மனமொன்றி சிவனை மனத்தில் நினைத்து  108 முறை நோட்டில் எழுதுங்கள் ,அது போதும்  
 
10. ஆலயம் வலம் வரும் போது கைகளை இடுப்புக்கு கீழே தொங்க விடாமலும் வீசி நடக்காமலும் பார்த்துக் கொள்ளவேண்டும்  
 
11.பெரிய புராணம் எனும் நாயன்மார்கள் வரலாற்றை படித்தும் கேட்டும் இன்புறலாம்        

தை  மற்றும் மாசி  மாதங்களில்  உலக உயிர்கள் மீது சிவபெருமான் கொண்ட பெருங்கருணையின் காரணமாக இரண்டு சனி பிரதோஷங்கள் தொடர்ச்சியாக வருகின்றன . (06-02-2016 , 20-02-2016) அதை நாம் சரியாக பயன்படுத்தி நமது தீ வினைகளால் படும் அல்லல் தீர்ப்போம் 
சனிப்பிரதோஷ புண்ணிய வேளையில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வணங்கி வழிபட்டு பெரும் பேறு பெறுவோமாக
                           

 
                                           போற்றி ஓம் நமசிவாய 

                                            
திருச்சிற்றம்பலம்
                                                    

                          

Wednesday, February 3, 2016

சிவ தீக்ஷை

                                                      ஓம் நமசிவாய
சிவ  தீக்ஷை
தீக்ஷை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிபடுத்திக்  கொள்ள இம்மை மறுமை நலன்கள் பெற  சிவபெருமான் திருவருள் பெற உரிமம் எனும் (தீக்ஷை) தேவை .
 
எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை பெறலாம். தீக்ஷை  பெறாதவர் பொதுச்சைவர் எனப்படுவர். அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  முப்பரிமாணமாக (திரிபுண்டரமாக)  பூச முடியாது . நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி .எனவே குரு மூலம் தீக்ஷை பெற வேண்டும் .நமது சமய குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் .
ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் 
ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு  முனிவரும் சிவ தீக்ஷை  செய்து வைத்துள்ளார்கள்   

ஏன் தீக்ஷை  பெற வேண்டும் 
 1.  சிவ பெருமானை ஆகமங்களில்  விதித்தபடி  வழிபாடு செய்வதற்கு உரிய  அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக  திருநீறு அணிந்து பூசை செய்யலாம் . 

2. தீக்ஷை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 
3.சமய தீக்ஷை பெற்றாலே அவர்களை  எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீக்ஷை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம்  ஆவி உலக துன்பங்கள் நம்மை அணுகாது .
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார் 
9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .
11.சிவோகம் பாவனைகள்  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .
அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
13. முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
14. தீக்ஷை பெற்று  ஆன்மார்த்த பூசை  செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம்  ). ஆகாமியம் ஏறாது 
  

   
                            போற்றி ஓம் நமசிவாய .


                            திருச்சிற்றம்பலம்