rudrateswarar

rudrateswarar

Thursday, February 26, 2015

சிவபுண்ணியம் செய்ய எளிய வாய்ப்பு

                                                         ஓம் நமசிவாய

சிவபுண்ணியம் செய்ய எளிய வாய்ப்பு   

சிவநேய செல்வங்களே அஞ்செழுத்தோதி அரனை வழிபடும் அடியார் பெருமக்களே , சிந்தையில் சிவனை வழிபடும் சிவபூசை செல்வர்களே உண்மைநெறி மெய்யன்பர்களே உங்களுக்கு சிவபுண்ணியம் செய்ய ஒரு  எளிய வாய்ப்பு 

இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ ?

காலமுண் டாகவே காதல்செய் துய்ம்மின்கருதரிய
ஞாலமுண் டானொடு நான்முகன் வானவர்நண்ணரிய
ஆலமுண் டான்எங்கள் பாண்டிப் பிரான்தன்அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்துமுந்துமினே.


விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும்
துளக்கில் நன் மலர்தொடுத்தால் தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில் கீதஞ் சொன்னார்க்கு அடிகள் தாமருளு மாறே


ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே 

 
உங்கள் ஊரிலோ அல்லது அருகாமையிலோ அல்லது எங்காவது வெளி ஊரிலோ தங்களுக்கு தெரிந்த வகையில் ஒரு கால பூசை கூட  இன்றி  பராமரிப்பின்றி சிதிலமடைந்தோ விளக்கேற்றப்படாமலோ ஏதாவது சிவாலயமோ அல்லது  சிவலிங்கத் திருமேனியோ இருக்குமானால் அதை தக்க முகவரியுடன் தெரியப்படுத்தி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி சிவபுண்ணியம் பெற்றுய்யுமாறு  தங்கள் திருவடி தாழ்ந்து வணங்கி கேட்டுக்கொள்கிறோம்

 
அலைபேசி எண் - 9965533644 ,9865020489

sivanadimaivelu@gmail.com 

d.surendran@gmail.com


                     போற்றி ஓம் நமசிவாய 

                          திருச்சிற்றம்பலம்