rudrateswarar

rudrateswarar

Thursday, April 14, 2016

திருமுறை பாராயணம்

                                                    ஓம் நமசிவாய


திருமுறை பாராயணம்
 
ஆசையறாய்  பாசம்விடாய்  ஆன சிவபூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீ நினையாய் -சீ சீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்              
 -தருமை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர்.

தமிழ் மக்களின் தவப்பயனாய்த் தோன்றிய அருளாளர்கள் இருபத்தெழுவர் நமக்கு அளித்துள்ள ஞானக்கருவூலங்கள்  பன்னிரு திருமுறைகள் .அவற்றை பக்தியோடு நாளும் பாராயணம் செய்து நலம் பெற வேண்டுகிறோம் 


திருமுறை பாராயணம் செய்யும் அன்பர்களுக்கு ஒரு நடைமுறை உள்ளது அதன்படி பாராயணம் செய்தால் ஓராண்டுக்குள் பன்னிரு திருமுறைகளையும் ஓதி பாராயணம் செய்யமுடியும் .

புத்தாண்டில் சித்திரை முதல் தேதியில்  பாராயணம் செய்யத்  துவங்கி பிறப்பிலியாகிய எம்பெருமானைச் சேர்ந்து நாமும் அப்பேறு பெறுவோம்


1 ஆம் திருமுறை -சித்திரை முதல் தேதி 

2ஆம் திருமுறை -வைகாசி முதல் தேதி 

3ஆம் திருமுறை -ஆனி முதல் தேதி 

4ஆம் திருமுறை -ஆடி முதல் தேதி 

5ஆம் திருமுறை -ஆவணி முதல் தேதி 

6ஆம் திருமுறை -ஆவணி  20ஆம்  தேதி 

7ஆம் திருமுறை -புரட்டாசி 20ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருவாசகம் -ஐப்பசி 5ஆம் தேதி 

8ஆம் திருமுறை திருக்கோவையார் -ஐப்பசி 15 ஆம் தேதி 

9ஆம் திருமுறை திருவிசைப்பா - ஐப்பசி 25 ஆம் தேதி 

10ஆம் திருமுறை திருமந்திரம் -கார்த்திகை 5 ஆம் தேதி 

11ஆம் திருமுறை -மார்கழி முதல் தேதி 

12ஆம் திருமுறை - தை முதல் தேதி


குறித்த தேதி முதல் அடுத்த திருமுறைக்கான துவக்க தேதி வரை ஒரு திருமுறை ஓதும் காலமாகும் தினமும் சராசரியாக ஐந்து  பதிகங்கள் ஓத வேண்டும் . தொடங்கும் தினம் அனுசரித்து மொத்த பதிகங்களை கருத்தில் கொண்டு பிரித்து ஓதலாம் 

திருமந்திரமும் பெரியபுராணமும் தினம் சராசரியாக நூறு பாடல்களுக்கு குறையாமல் ஓதினால் ஓராண்டில் பன்னிரு திருமுறைகளையும் பாராயணம் செய்து விடலாம் . கற்றதினால் ஆய பயன் பெறலாம் .



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்

சிவனடிமை வேலுசாமி