rudrateswarar

rudrateswarar

Saturday, February 20, 2016

தீக்ஷை பெற மறுப்பவர்கள்

                                                   ஓம் நமசிவாய

தீக்ஷை பெற மறுப்பவர்கள் 

   தீக்ஷை பெறாதவர்கள் , பெறாததற்கு  சொல்லும் சில காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் 

1.ஆலய வழிபாடே போதும் தனியாக தீக்ஷை வாங்கி பூசை  செய்யவேண்டும் என்று அவசியமில்லை 

2.சடங்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை .

3.எனக்கு தீக்ஷை  அளிக்கும் அளவுக்கு இன்னும் குரு கிட்டவில்லை 
ஏற்கெனவே நான் நிறைய படித்துள்ளேன் 

4.செத்தபிறகு தானே இதன் பலன் கிடைக்கும் நாம் உட்கார்ந்து பார்க்கவா போகிறோம். செத்தபிறகு சிவலோகம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை . இப்ப இந்த பிறவியில் என்ன கிடைக்கும் 

5.நாயன்மார்கள் தீக்ஷை பெறவில்லையே. நாயன்மார்கள் தீக்ஷை பெற்றதாக சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் எங்கும் கூறவில்லையே

6.தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே இறைவன் ஞானத்தை வழங்குவான் என்றால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது .
அவர் கடவுளாக இருக்கமுடியாது 

7.தீக்ஷை பெறுவானேன் அதை (அந்தியேஷ்டி )பின்னர் இறக்குவானேன்

8.அனுட்டானம் மற்றும் பூசை கிரியை செய்ய நேரமில்லை  எனக்கு தொழில் அந்தமாதிரி உள்ளது

9.அதற்கான வயது வரவில்லை அல்லது வேளை வரவில்லை 

10.நான் திருமுறைகளைப் படிக்கிறேன் தினம் நமசிவாய மந்திரம் சொல்கிறேன் அதுவே போதும் தீக்ஷை தேவையில்லை

11.நான் அசைவம் சாப்பிடுகிறேன் . அதை நிறுத்த முடியவில்லை 
அல்லது நிறுத்த முடியாது

12.ஒரு குருவிடம் தீக்ஷை வாங்கினால் அவரிடம் அடிமை போல இருக்கவேண்டும்  ஒவ்வொன்றுக்கும் அவரிடம் அனுமதி கேட்கவேண்டும் அதெல்லாம் நமக்கு சரிப்படாது  

இப்படி அடியேன் அறிந்த வகையில் அன்பர்கள் பல பேர் மேற் சொன்ன சப்பைக் காரணங்களைச்  சொல்லிக்கேட்டுள்ளேன் . 

இதற்கு என்ன தீர்வாக இருக்கமுடியும் ? . எப்படி விளங்க வைத்து ஆன்மாக்களை பக்குவப்படுத்துவது?  நெறிப்படுத்துவது?

இதைப் படிக்கும் மெய்யன்பர்கள் இதற்கு தக்க விடை அருளுமாறும்     விடைமேல் வரும் எம்பெருமானையும் வேண்டிக்கொள்கிறேன் 

உங்கள் பின்னூட்டம் காண விழைகிறேன் 

சிவனடிமைவேலுசாமி 


                                         போற்றி ஓம் நமசிவாய 


                                                திருசிற்றம்பலம்    

No comments:

Post a Comment