rudrateswarar

rudrateswarar

Friday, May 4, 2018

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14


தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14
  
           திருச்சிற்றம்பலம்



வழிபாடுகளில் ஆப்தவாக்கியமான சிவபரம்பொருள் நாம் உய்யும் பொருட்டு அருளிய வேத சிவாகமங்களான வடமொழி மந்திரங்களே வேண்டும் என்பதை சென்ற பதிவுகளில் வலியுறுத்தி உள்ளோம் .

மேலும் மொழிபெயர்ப்பு மந்திரங்களால் பயனில்லையென முந்தைய பதிவுகளில் மேற்கோள் காட்டியிருந்தோம்.அதாவது அஸ்த்ராய நம என்பது ஆயுதம் போற்றி என மாறி அத்தம்பட் ஆயத்தம்பட் என்று மனம் போன போக்கில் திருத்தியமையை கண்டோம்.

ஆனால் வடமொழியில் காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே மந்திரம் தான் .

உதாரணத்திற்கு ஆசமன மந்திரங்கள்



1.ஆத்ம தத்வாய ஸ்வதா

2.வித்யா தத்வாய ஸ்வத

3.சிவ தத்வாய ஸ்வதா



ஆனால் இந்த மொழிபெயர்ப்பு மந்திரவாதிகள்



1.போற்றி நாலாறுண்மை

2.போற்றி ஏழ் மெய்யறிவு

3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (!!!!!) 
இப்படி ஒருவர்



இன்னொருவர்



1.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் ஆன்மதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

2.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் வித்தியாதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

3.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் சிவதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்



மற்றொருவர்

1.ஓம் ஆத்ம தத்துவங்களை ஏற்றருள்க

2.ஓம் வித்யா தத்துவங்களை ஏற்றருள்க

3.ஓம் சிவ தத்துவங்களை ஏற்றருள்க



மேலும் ஒருவர்



1.உயிர் மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

2.கலை மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

3.சிவ மெய்மையை ஏற்றுக்கொள்வீராக



இன்னும் இருக்கிறது பதிவின் நீளம் காரணமாக தவிர்த்துள்ளோம் . ஏன் இந்த மொழிபெயர்ப்பு வேலை ? .வழிபாட்டில் என்ன புதுமை ? சுவாமிக்குத் தெரியாதா ? தனு கரண புவன போகங்களைக் கொடுத்தவருக்கு தம்மை வழிபட்டு உயிர்கள் நற்கதி பெற என்ன சாதனம் கொடுக்கவேண்டும் எம்மொழியில் கொடுக்க வேண்டும் என்று


இவர்கள் சாமிக்கு வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுக்கிறார்களா ? நாங்க சொல்றத நீ கேட்டுத்தான் ஆகணும் என்பது மாதிரி என்ன ஆணவ மறைப்பு. மற்ற மாநிலங்களில் ஆன்மீகத்தில் வழிபாட்டில் மொழித்தலையீடு இல்லை . தெலுங்கு வழிபாடு கன்னடவழிபாடு என்று இல்லை . அங்கெல்லாம் இறைவாக்கான சமஸ்கிருத மந்திரங்களைத் துவேஷிப்பதில்லை . மாறாக துதிக்கிறார்கள் .ஆனால் இறை சிந்தனை இல்லாத இக்கூட்டம் ??????



இந்த மூன்று மந்திரத்துக்கு நான்கு பேர் நான்குவிதமாக பொருள் சொல்கிறார்கள் என்றால் இவர்களுக்குள்ளே யார் புலமை மிக்கவர் அறிவாளி என்ற போட்டியே தவிர மக்களை நல்வழிகாட்டி நற்கதிக்குச் செலுத்தும் நோக்கமல்ல .இது காலப்போக்கில் அந்த ஜாதிகாரன் சொன்ன மந்திரத்த நான் சொல்றதா என்று ஜாதிக்கொரு மந்திரமாகும் . இதனால் வழிபாட்டில் குழப்பம் மிஞ்சுமே தவிர நன்மை கிட்டாது .இது போன்ற அசைவர்கள் ஏற்கெனவே ஜாதி பற்றி வழிபாட்டில் புகுத்திவிடடார்கள் ஆம் சத்தியம் இது .ஏனெனில் பிராமணத்துவேஷமாக வந்தது தானே இந்த தமிழ்வழிபாடு என்பது .ஆக ஜாதி ரீதியில் ஏற்கெனவே கிளம்பியாயிற்று

இதில் இன்னும் கொடுமை பின்னாளில் இது மனம் போன போக்கில் ஆளாளுக்கு மந்திரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மந்திர பீஜம் எல்லாம் நெல்லை ஸ்லாங்  கோவை ஸ்லாங் மதுரை ஸ்லாங் சென்னை ஸ்லாங் என்று வந்தாலும் வரும்.



ஏனெனில் இந்த கொடுமைக்கு ஒரு உதாரணம் பஞ்சகவ்யம்.

கொங்கு நாட்டுத் தமிழ்வழிபாட்டுக்காரர்கள் பஞ்சகவ்யமானது பால் தயிர் நெய் கோமியம் கோசலம் என பயன் படுத்துகிறார்கள். ஆனால் சென்னைக்காரங்க கோமியம் கோசலத்திற்கு பதிலாக மோரும் வெண்ணையும் பயன்படுத்துகிறார்கள்.



இவர்கள் யாருக்கும் சிவவழிபாடோ அதன் பயனாம் வீடுபேறோ முக்கியம் அல்ல .தமிழ் வியாபாரம் திருமுறை வியாபாரம் காசு பணம் புகழ் இது மட்டுமே . தமிழ் தாய்தமிழ் தமிழ்த்தாய் என்று சொல்வோரே உமக்கு எத்தனை பிறவியாய் தமிழ் தாய் மொழியாக இருக்கிறது. இந்த திராவிட கட்சியின் ஆன்மீகப் பிரிவினருக்கு ஆதரவு கொடுத்தால் சிந்திக்கவே முடியவில்லை ஆன்ம முன்னேற்றத்தை. விழித்துக்கொண்டு படுகுழியில் வீழ்வோரை என்ன சொல்ல ?


திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. மிக அருமை :ஆழந்த ஆராய்சி
    பணி தொடர வாழ்த்துக்கள் 🌹🙏

    ReplyDelete
  2. மிக அருமை

    ReplyDelete