rudrateswarar

rudrateswarar

Tuesday, March 5, 2013

மங்களப்பதிகம்

                                                                  ஓம் நமசிவாய 

 

மங்களப்பதிகம் 


நல்ல ஒலி அலைகள் பரவி மங்களம் பெருகவும் திருமணம் மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளில் வாழ்த்தவும் குடும்ப ஒற்றுமைக்கும் ஓத வேண்டிய "மங்களப் பதிகம்"

                   திருச்சிற்றம்பலம்




மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 


எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர்குறைவிலைக்கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில்நல்லாளொடும்பெருந்தகைஇருந்ததே




போதையார்பொற்கிண்ணத்துஅடிசில்பொல்லாதெனத்
தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்
காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையாள்அவளொடும்பெருந்தகைஇருந்ததே





தொண்டணைசெய்தொழில் துயர் அறுத்துய்யலாம்
வண்டனைக்கொன்றையான்மதுமலர்ச் சடைமுடிக்
கண் துணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்துணையாகஓர்பெருந்தகைஇருந்ததே



அயர்வுளோம் என்றுநீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்

கயல்வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பலதுதிசெயப்பெருந்தகைஇருந்ததே




அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சகமே
விடைஅமர்கொடியினான்விண்ணவர்தொழுதெழும்
கடைஉயர் மாடமார் கழுமல வளநகர்ப்
பெடைநடைஅவளொடும்பெருந்தகைஇருந்ததே





மற்றொரு பற்றிலை நெஞ்சகமே மறைபல
கற்றநல் வேதியர் கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல் குல்திருந்திழை யவளொடும்
பெற்றென்னைஆளுடைப்பெருந்தகைஇருந்ததே




குறை வளைவது மொழி குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள்நேரிழை அவளொடும்
கறை வளர் பொழிலணி கழுமல வள நகர்ப்
பிறைவளர்சடைமுடிப்பெருந்தகைஇருந்ததே






அரக்கனார் அருவரை எடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே
சுருக்குவாள் அருள் செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீர்அவளொடும்பெருந்தகைஇருந்ததே





நெடியவன் பிரமனும் நினைப் அரிதாய் அவர்
அடியோடு முடியறியா அழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி கழுமல வளநகர்ப்
பிடிநடைஅவளொடும்பெருந்தகைஇருந்ததே





தாருறு தட்டுடைச் சமணர் சாக்கியர்கள்தம்
ஆருறு சொர்களைந்தடியினை அடைந்து உயமின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத்தாளொடும்பெருந்தகைஇருந்ததே

 



கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
பெருந்தடங்கொங்கையோடுஇருந்தஎம்பிரான்தனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவார்அவர்கள்போய்விண்ணுலகாள்வரே


 

                           திருச்சிற்றம்பலம்



திருக்கழுமலம் எனும் சீர்காழிப் பதியில் திருஞானசம்பந்த பெருமானால் அருளப் பெற்றது



                           போற்றி ஓம் நமசிவாய

No comments:

Post a Comment