rudrateswarar

rudrateswarar

Thursday, May 14, 2015

திருவிளக்கு(தீபம்) ஏற்றி வழிபடும் பாடல்கள்


           ஓம் நமசிவாய

திருவிளக்கு(தீபம்) ஏற்றி வழிபடும் பாடல்கள்



இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே


உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய்அட்டிஉயிரெனும்திரிமயக்கி
இடம்படும் ஞானத்தீயால் எரிகொளஇருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழல் அடி காணலாமே

தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
    தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
    கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
    மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

சோதியே சுடரே சூழொளி விளக்கே
    சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் ணீற்றாய்
    பங்கயத் தயனும்மா லறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
    நிறைமலர்க் குருந்தமே வியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
    அதெந்துவே என்றரு ளாயே

விளக்கினார் பெற்றஇன்பம் மெழுக்கினால்  பதிற்றியாகும்
துளக்கில் நன்மலர்தொடுத்தால் தூயவிண்ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்நெறி ஞான மாகும்
அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னை வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம தாய்ந்தனள் வேதியர்க் காய் நின்ற
சோதி தனிச்சுடர்ச் சொரூபம தாய்நிற்கும்
பாதி பராபரை பன்னிரண் டாதியே

மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்து
ஊனை விளக்கி உடனிருந் தானே

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே


              திருசிற்றம்பலம் 


          போற்றி ஓம் நமசிவாய
 

No comments:

Post a Comment