rudrateswarar

rudrateswarar

Thursday, May 14, 2015

தூபம் காட்டும் போது பாடும் பாடல்கள்

                                                       ஓம் நமசிவாய

 
தூபம் காட்டும் போது பாடும் பாடல்கள்






தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத் திருள்  அற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்ளெழு நுண்புகை
மேவித் தமுதொடு மீண்டது காணே

தொங்கலும் கமழ்சாந்தும் அகில்புகையும்

           தொண்டர்கொண்டு
அங்கையால் தொழுதேத்த அருச்சனைக்கு 

          அன்றருள் செய்தான்
செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங்

         குடியதனுள்
கங்கைசேர் வார்சடையான்

        கணபதீச்சரத்தானே

எந்தமது சிந்தைபிரியாத பெருமான்

          எனஇறைஞ்சி இமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு

         தீபமலிவாய்மையதனால்
அந்தியமர் சந்திபல அர்ச்சனைகள்

         செய்யஅமர்கின்ற அழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு 

          மேவுபதி சண்பைநகரே

கோங்கு செண்பகம்  குருந்தொடு பாதிரி

            குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை

            உறைவானைப்
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் 

           பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்குவார் அவர் நாமங்கள் நாவினில்

           தலைப்படும்  தவத்தோரே

பெரும்புலர் காலை மூழ்கிப் 

              பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு

            ஆர்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதி 

            யினால்  இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் 

           கடவூர்வீ ரட்ட னாரே

வாம தேவன் வளநகர் வைகலும்
காமம்  ஒன்றிலராய்க்  கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வார்  எதிர் செல்லலே

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு 

           இசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம்

           என் நாவில் மறந்தறியேன்
உலந்தார்தலை யில் பலி கொண்டுழல்வாய் உடலுள்

          உறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 

         வீரட்டா னத்துறை அம்மானே




             திருசிற்றம்பலம் 



         போற்றி ஓம்நமசிவாய

2 comments: