rudrateswarar

rudrateswarar

Saturday, July 11, 2015

சிவநாம மகிமை

                          ஓம் நமசிவாய

சிவநாம மகிமை

 

சிவப்பிரகாச சுவாமிகள் அருளியது 


                               கலிவிருத்தம்

 
வேதம் ஆகமம் வேறும் பலப்பல 
ஓதி நாளும் உளந்தடு மாறன்மின் 
சோதி காண் இருள் போலத் தொலைந்திடும் 
தீதெ லாமும் சிவசிவ வென்மினே.       

புல்ல ராயினும் போதக ராயினும் 
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு 
நல்ல வாகு நவையென்று அகற்றிய 
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே.       

நாக்கி னானும் நயனங்க ளானும் இவ் 
ஆக்கை யானும் அருஞ்செவி யானுநம் 
மூக்கி னானும் முயங்கிய தீவினை 
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.      

சாந்தி ராயணம் ஆதி தவத்தினான் 
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப் 
போந்த பாகத மேனும் பொருக்கெனத் 
தீந்து போகும் சிவசிவ வென்மினே.      

வில்லி தென்ன விளங்குந் திருநுதல் 
வல்லி பங்கன் மலரடி காணிய 
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ் 
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.      

தீய நாளொடு கோளின் செயிர்தவு 
நோய கன்றிடும் நூறெனக் கூறிய 
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந் 
தீய தீருஞ் சிவசிவ வென்மினே.       

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை 
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே 
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின் 
திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.      

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென 
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும் 
வந்த தீவினை மாற்றுவன் ஆதலால் 
சிந்தை யோடு சிவசிவ வென்மினே.      

நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வான் 
நீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார் 
நீச ரேயென் றியம்புறு நின்றுஉப 
தேச நூல்கள் சிவசிவ வென்மினே.       

எண்ணி நெஞ்சில் சிவசிவ வென்பவர் 
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும் 
உண்ண டுங்குவன் ஒண்திறல் கூற்றுவன் 
திண்ண மீது சிவசிவ வென்மினே.       


 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

இழிவுறுபுன் கருமநெறியினன் எனினும் கொலை
       வேடன் எனினும் பொல்லாப் 
பழிமருவு பதகன் எனி னும்பதித னெனினு
       மிகப் பகரா நின்ற 
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்று 
      ஒருமுறைதான் மொழியி லன்னோன் 
செழியநறு மலரடியின் றுகளன்றோ 
       எங்கள்குல தெய்வ மென்ப.        
 
 
 
 
 
           போற்றி ஓம் நமசிவாய 
 
 
              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment