rudrateswarar

rudrateswarar

Thursday, July 9, 2015

பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம்

                                                          ஓம் நமசிவாய



பொன்னார் திருவடிக்கு விண்ணப்பம்

நாம் இறைவனிடம் எவ்வளவோ விண்ணப்பங்களை வைக்கிறோம் 
ஆனால் நந்தி எம்பெருமான் இறைவனிடம் வைக்கும் விண்ணப்பமாக திருவையாற்றுப் புராணத்தில் வருவதை இங்கு அடியேன் பகிர்கிறேன். அன்பர்களும் இவ்விண்ணப்பத்தை நித்தம் இறைவனிடம் வைத்து பேறு பெற வேண்டுகிறோம் 

 
திருச்சிற்றம்பலத்துள் உறையும் சிவக்கொழுந்தே !
நின் பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு வின்ணப்பம்-அது தான்
மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம்புலன்களுக்கு ஏவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனப் பேதையர் தம்மொடு பிணக்கும்
உறுதி நல்லறம் செய்பவர் தங்களோடு உறவும்
யாதும் நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாதவத்தினர் ஒறுப்பினும் வணங்கிடும் மகிழ்வும்
ஓதும் நல்லுபதேச மெய்யுறுதியும் அன்பர்
தீது செய்யினும் சிவச்செயலெனக் கொளும் தெளிவும்
மனமும் வாக்கும் நின் அன்பர்பால் ஒருப்ப்டு செயலும்
கனவிலும் உனதன்பருக்கு அடிமையாம் கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்
தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடும் திறனும்
வாய்மையாகவே பிறர்பொருள் விழைவுறா வளனும்
ஏமுறும் பரதாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்மை நெஞ்சில் யான் எனது எனும் செருக்குறாத்துறவும்
துறக்க மீதுறையினும் நரகில் தோய்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக் கொழுந்தணி சடைப்பெரும ! இவ்வரம்
மறுத்திடாது எமக்கு நீ வழங்கல் வேண்டுமால் 

                  
           போற்றி ஓம் நமசிவாய

              திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment