rudrateswarar

rudrateswarar

Wednesday, March 19, 2014

அவிநாசியில் திருமுறை அற்புதம்

                                                          ஓம் நமசிவாய

அவிநாசியில் திருமுறை அற்புதம்


சுந்தரர் முதலைவாய் பிள்ளை அழைத்த உற்சவம் வரும் பங்குனி திங்கள் 29 ஆம்       நாள் (12-04-2014 )நடைபெறுகிறது 

விநாசம் என்றால் அழிவு என்று அர்த்தம் விநாசே காலே விபரீத புத்தி என்பது போலே அவிநாசி என்றால் அழிவில்லாத என்று பொருள் .

காசியில் வாசி அவிநாசி என்பார்கள். காசியில் போய் வழிபட்டால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அது இத்தல இறைவனான அவிநாசி லிங்கேஸ்வரரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருமுறைகளிலே ஏழாம் திருமுறையில் சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடியருளி யுள்ளார் எட்டாம் திருமுறையிலே மணிவாசகர் அரிய பொருளே அவிநாசியப்பா என்றும் ஆறாம் திருமுறையில் அப்பர் சுவாமிகள் அவிநாசி கண்டாய் என்றும் பாடியருளிய பேறு பெற்ற தலம்


சுந்தர மூர்த்தி நாயனார் தல யாத்திரை செல்லும் போது இவ்வூரில் உள்ள அந்தணர்கள் வாழும் தெருவின் வழியே சென்ற போது எதிரெதிராக இருந்த இரு வீடுகளில், ஒன்றில் மங்கள ஒலியும் மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது . அது பற்றி அங்குள்ளவர்களிடம் விசாரிக்க ஒரு வீட்டில் பிள்ளைக்கு பூணூல் கல்யாணம் நடக்கிறது என்றும் எதிர் வீட்டில் உள்ளவர் களின் பிள்ளையும் அதே வயது உடையவன் என்றும் மூன்று  ஆண்டுகள் முன் முதலை குளக்கரையில் விழுங்கியதனால் அந்த பெற்றோர் அதை நினைந்து அழுவதையும் கூறினர்  

இந்த சம்பவத்தை தீர விசாரிக்கையில், இரு வீட்டிலும் நான்கு வயதுடைய பாலகர்கள் இருந்ததாகவும், அதில் இவர்களது பையனை முதலை இழுத்து சென்று விட்டதாகவும், இவர்களது பையனும் இருந்திருந்தால் அவனுக்கும் இப்போது பூணூல் கல்யாணம் நடத்தியிருக்கலாம் என்று அழுவதாயும்  தெரிவித்தனர்.

இதனை அறிந்த சுந்தரர் இத்தல இறைவனை கோயிலுக்குள் வெளியே நின்று மனமுருகி பிரார்த்தனை செய்து "எற்றான் மறக்கேன் " என்ற திருப்பதிகம் பாடி பிள்ளை தரச்சொல்லு காலனையே என்று பாட அவிநாசியப்பரின் அருளால் வறண்ட  குளத்தில் நீர் நிறைந்து முதலை வந்து அதன் வாய்க்குள்  3 ஆண்டுகளுக்கு முன் போன பையன் 7 வயது வளர்ச்சியுடன் வெளியே வந்தான். பிறகு அப்பாலகனை பெற்றோரிடம் அழைத்து சென்று சேர்த்து அவர்களது விருப்பப்படி பூணூல் கல்யாணமும் நடத்தி வைத்தார். இது இத்தலத்தில் திருமுறை நடத்திய அற்புத நிகழ்ச்சியாகும். ஆண்டு தோறும் பங்குனி மாத உத்திரத்தில் 3 நாட்கள் "முதலைவாய்ப்பிள்ளை உற்சவம்' நடக்கிறது.


அப்பதிக பாடல் 

பாடல் எண் : 4
 

உரைப்பார் உரைஉகந்துள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும்அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர்அவி னாசியே
கரைக்கால்முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே

 
                    
திருமுறைகளை நம்பிக்கையுடன் நாளும் ஓத வேண்டுவதெல்லாம் கிட்டும் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும் ?

இன்றும் அவிநாசியில் அந்தணர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆரூரன் ,சுந்தரமூர்த்தி , நம்பிஆரூரன் என்று பெயர் வைத்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நன்றி செலுத்துகிறார்கள்                     



                        போற்றி ஓம் நமசிவாய


                             திருச்சிற்றம்பலம்  



No comments:

Post a Comment