rudrateswarar

rudrateswarar

Tuesday, March 26, 2013

தவ முதல்வர் சம்பந்தர்

                                                       ஓம் நமசிவாய



தவ முதல்வர் சம்பந்தர்

                          
தவம் சிவத்தைக் காட்டும் சம்பந்தர் தவ முதல்வர் என்று  சேக்கிழார் பெருமான் கூறுகிறார் எப்படி?  அவர் தவம் செய்தார் எங்கு எப்போது என்று பெரியபுராணத்தில்  எங்கும் சொல்லப்படவில்லை


சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
பவமதனை  அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்
உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்


பிறகு எப்படி  சேக்கிழார் பெருமான் தவமுதல்வர் சம்பந்தர் என்று கூறினார் 
தவம் என்றால் என்ன?  தவம்  என்றால் ஐம்புலனடக்கம் செய்து காட்டில் இறைவனை  தியானித்து இருப்பது  என்பர்  புலனை அடக்கி விடலாம்    புலன்  அடங்கி விடும் ஆனால்  மனத்தை அடக்கமுடியுமா  
மனத்தை வெல்வது முடியாத காரியம் 
அதை வென்று விட்டால் தவத்தில் வென்றவராகலாம் மனதை வெல்ல முடியாமல் மிகப்பெரிய தவ முனிவர் என்று சொல்லும் விசுவாமித்திரர்  பட்ட கதை நமக்கு தெரியும் திருஞானசம்பந்தர் சுவாமிகள் தலங்கள்தோறும் சென்று இறைவனை தொழுது பதிகம்  பாடி வரும் நியமத்தில் திருவொற்றியூர் பெருமானை தரிசனம்செய்து இருந்தார் 

திருமயிலையிலே சிவநேசர் எனும் பெரும் வணிகர் இருந்தார் சிவபெருமானின்  மேல் உள்ள மாறா அன்பினால் சிவநேசர் எனப் பெற்றார் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து அரனடியே சிந்தித்து இருப்பார் அவர்  சம்பந்தப்பெருமான் சிவஞானம் பெற்றதை யும் பரசமய இழி செயல் கண்டித்து சைவமே மெய் சமயம் என்று நிலைநாட்டிய தன்மை யினையும் அடியார்கள் சொல்லக்கேட்டு ஞானசம்பந்தர் திருவடிகளில் அளவில்லாத ஒப்பற்ற பெருவிருப்புடன்  இரவும் பகலும் அவரை புகழ்வதும் அன்பர்களிடம் கேட்பது மாக  இருந்தார்

குபேரனை ஒத்த என்று சொல்லும் அளவுக்கு செல்வம் இருந்தும் மகப்பேறு இல்லாமல் போய்விடுமோ என்று இருந்த காலத்தில் 
அவர் செய்த சிவதொண்டின் பயனாக பூமகள் போன்று ஒரு பெண் பிறந்தாள் தன் மகளின் அழகையும் அவளின் மேன்மையான பண்புகளையும் கண்டு இன்பத்துடன் இவளை  மணம் செய்து கொள்ளும் மணமகனே இந்த அளவற்ற  செல்வங்களுக்கெல்லாம் உரிமையுடைய வன்  ஆவான் என்று கூறினார் 

அத்தகைய நாளில் பாண்டிய நாட்டில் சமணர்களை வாதில் வென்றதும் 
பாண்டியனுக்கு வெப்பு நோய் நீக்கியது திருநீற்றின் மேன்மையை உலகுக்கு  உணர்த்தியது  எல்லாம் கேட்ட  சிவநேசர் ஞானசம்பந்தர் இருந்த திசையை வணங்கி சுற்றமும் மற்றவரும் கேட்கும் வண்ணம் எனது மகள் பூம்பாவையையும் எனது பெருஞ் செல்வத்தையும் சீர்காழிப்பிள்ளையாருக்கு  தந்தேன் என்று கூறினார்  அப்படிப்பட்ட சூழ் நிலையில் நச்சுப்பாம்பு ஒன்று தீண்டி பூம்பாவை இறந்து விட்டாள் மிகவும் துயருற்று அவளின் சாம்பலை ஒரு குடத்தில் இட்டு வைத்திருந்தார் 

திருவொற்றியூரில் பிள்ளையார் தரிசனம் முடித்து மயிலைக்கு வருகிறார் என்ற செய்தி கேட்ட சிவநேசர் நகர் முழுதும் அலங்கரித்து அவரை வழிமேல் சென்று நிலத்தில் விழுந்து வணங்கினார் அப்போது சிவநேசரின் அடிமைப்பண்பு  குறித்தும் அவர்  மகள் அரவம் தீண்டி இறந்ததையும்  சம்பந்தரிடம் அடியார் பெருமக்கள் கூறினர் அது கேட்ட பிள்ளையார் திருக்கபாலீஸ்வரம்  சென்று வணங்கி போற்றி தொழுது இருந்து  சிவநேசரிடம் உமது மகளுடைய எலும்பு 
சாம்பல் உள்ள குடத்தினை கொண்டு வந்து கோயில் வாசலில்  வையும் என்றார் 

அந்த குடத்தினருகே சென்று பூம்பாவை என்று அழைத்து இறைவனிடம் தொழுது மட்டிட்ட என்ற திருப்பதிகம் பாடி உயிர்ப்பித் தருளினார்  பூம்பாவை உருவம்  பெற்று திருமகளை போன்ற பேரழகுடன்   குடத்தினுள் இருந்து தோன்றினார் 

பூம்பாவையின் அழகை கூந்தல் , நெற்றி, புருவம், கண்கள், நாசி, வாய், காது,கழுத்து, முகம்,கைகள்,கொங்கை,கொப்பூழ்,முடி
நேர்த்தி,அல்குல்,தொடை,முழந்தாள் , கணுக்கால்,குதிகால்,பாதம் என்று பதினான்கு 
பாடல்களில் சேக்கிழார்  விவரிக்கிறார் 

காரணம் அவருடைய  நோக்கம் பூம்பாவை என்னும் பெண்ணை வர்ணிப்பதல்ல 

பிரமன்தான் படைத்த திலோத்தமையின் 
அழகில் மயங்கி  அவள்  அழகை  நான்கு முகங்களாலும் கண்டு மகிழ்ந்தான்  அவளை விட மேலான நல்ல தன்மைகள் பூம்பாவையாரிடம் விளங்க சிவபுண்ணிய  
விளைவாகிய பதினாறு வயதுடைய  சீர்காழித் தலைவரான ஞானசம்பந்தர்  நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானின் 
அருட்பெருக்கையே ஆயிரம் முகங்களால் காண்பார் ஆனார்

இந்த ஒப்பு நோக்கும் விதத்திலேயே 
பூம்பாவையின் அழகை வர்ணித்துள்ளார் 
இத்தகைய பேரழகுடைய பெண்ணை அவர் நிராகரித்தார் என்பதற்காக 

சிவநேசர் சம்பந்தரின்  திருவடியின் மேல்  வணங்கி நின்றார் உமது மகளை  இல்லத் துக்கு அழைத்து செல்லுங்கள் என்றார் 
சிவநேசரோ அவளை தாங்கள்  மணம் புரிந்து அருளுங்கள் என்றார் அது கேட்ட சம்பந்தர் பெருமானார் நீங்கள் பெற்ற  மகள் பாம்பு தீண்டி இறந்து கபாலீசரின்அருளால்  நாம் உயிர்ப்பித்ததால் நீர் சொல்வது 
சரியல்ல என்றார்

அளவற்ற ஆண்டுகளை  தன் ஆயுளாக கொண்ட பிரமன் தான் படைத்த 
திலோத்தமையின் அழகில் மயங்கினான்  ஆனால் பதினாறு வயது உள்ள சம்பந்தர் தான் 
உயிர்ப்பித்த பெண்ணை மகள் என்று கூறுகிறார்

இந்த கூற்றே அவரை தவமுதல்வர் என்று 
சொல்ல வைத்தது பதினாறு  வயது கட்டிளம்  காளையான சம்பந்த சுவாமிகள்   தன் மனம் 
அடக்கிய தன்மையே அவரை  தவமுதல்வர்  ஆக்கியது அதற்கு  ஈடு இணை வேறில்லை 

                                                  


                      போற்றி ஓம் நமசிவாய 

                                                                      

                           திருச்சிற்றம்பலம்        

2 comments:

  1. காமம், கோபம் நீங்க பெறுவதே தவம் என்று அதற்கு சரியான விளக்கம் கம்பர் தன் பாடலில் விசுவாமித்திரர் மொழியாக ...
    தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
    வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
    செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
    ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete