rudrateswarar

rudrateswarar

Monday, March 24, 2014

பழமொழிப் பதிகம்

                                                         ஓம் நமசிவாய


பழமொழிப் பதிகம்


நான்காம் திருமுறையில் ஐந்தாவது பதிகமாக இந்த பதிகம் அமைந்துள்ளது . திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய இந்த பதிகத்தில் பாடல்  தோறும் ஒரு பழமொழி வைத்து அருளியுள்ளார் .நாவுக்கரசு என்று இறைவரால் பெயர் சூட்டப்பெற்றது எத்துணை சால பொருத்தமானது 

                            
                           திருச்சிற்றம்பலம் 


மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த 
              மேனியான் தாள்தொ ழாதே
உய்யலாம்  மென்றெண்ணி உறிதூக்கி 

              உழிதந்தென் உள்ளம்விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலை குயில்கூவ 

              மயில் ஆலும் ஆரூ ரரைக்
கையினால் தொழாதுஒழிந்து 
கனியிருக்கக்    
              காய்கவர்ந்தகள்வ னேனே.  


என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்டு 
           என்னையோர்  உருவம்  ஆக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்டு  

           என்னுள்ளம்  கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு  

           அருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் 

            காக்கைப்பின் போன வாறே.   


பெருகுவித்துஎன்பாவத்தைப்பண்டெலாம்       
             குண்டர்கள்தம்  சொல்லே கேட்டு
உருகுவித்து என் உள்ளத்தி னுள்ளிருந்த                     கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு                      
பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறம் இருக்க                  
றம்விலைக்குக் கொண்ட வாறே. 


குண்டனாய்த்தலைபறித்துக்குவிமுலையார்
           நகைநாணாது உழிதர் வேனைப் 
பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையில் 
           தெளித்துத்தன் பாதம்காட்டித் 
தொண்டெலாம் இசைபாடத் தூமுறுவல் 
            அருள்செய்யும் ஆரூரரைப்
பண்டெலாம் அறியாதே பனிநீரால் 
             பாவைசெயப் பாவித் தேனே  


துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் 
           சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரி தந்து ஈங்கு  இருகையேற்று  

           இடஉண்ட ஏழை யேனான்
பொன்னாகத்து  அடியேனைப் புகப்பெய்து 

            பொருட்  படுத்த ஆரூ ரரை
என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்கு  

             ஆதனாய்  அகப்பட் டேனே. 


பப்போதிப் பவணனாய்ப் பறித்த தொரு 
             தலையோடே திரிதர் வேனை
ஒப்போட ஓதுவித்துஎன் உ ள்ளத்தின்  

             உள்ளிருந்து அங்கு  உறுதி காட்டி
அப்போதைக்கு  அப்போதும்  அடியவர்கட்கு  

             ஆரமுதாம்  ஆரூ ரரை
எப்போதும் நினையாதே இருட்டறையின் 

              மலடு கறந்து  எய்த்த வாறே. 


கதியொன்றும்  அறியாதே கண்ணழலத் 
          தலைபறித்துக் கையில்  உண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண 

          நகைநாணாது  உழிதர் வேற்கு
மதிதந்த ஆரூரில் வார்தேனை 

          வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதியின்றி மதியிலி யேன் விளக்கிருக்க 

           மின்மினித்தீக் காய்ந்த வாறே.  


ஒட்டாத வாளவுணர் புரமூன்றும்  
           ஓரம்பின் வாயில் வீழக்
கட்டானைக் காமனையும்  காலனையும்  

           கண்ணினெடு காலின் வீழ
அட்டானை  ஆரூரில்  அம்மானை 

           ஆர்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க 

           அவஞ்செய்து தருக்கி னேனே. 


மறுத்தான் ஓர் வல்லரக்கன்  ஈரைந்து 
           முடியினொடு தோளும்  தாளும்
இறுத்தானை  எழின்முளரித் தவிசின்மிசை

           இருந்தான்றன் தலையில்  ஒன்றை
அறுத்தானை ஆரூரில்  அம்மானை 

           ஆலாலம்  உண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க 

           இரும்புகடித்து எய்த்த வாறே.  


                            திருச்சிற்றம்பலம்


                      போற்றி ஓம் நமசிவாய

1 comment: