rudrateswarar

rudrateswarar

Thursday, August 8, 2013

திருவாதிரை திருப்பதிகம்

                                                                 ஓம் நமசிவாய


திருவாதிரை திருப்பதிகம்


பெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்றுமையாய் நீண்ட நாட்கள் வாழ ஓத வேண்டிய திருப்பதிகம். 

திருவாரூரில் உள்ள கமலாம்பிகை உடனமர் புற்றிடங்கொண்ட பெருமானின் மார்கழித் திருவாதிரைத்  திருவிழாவின் சிறப்பினை  அப்பர் சுவாமிகள் அருளிச்செய்தது 
இத்திருப்பதிகம் 


                               திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1


முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே
பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே
வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 2



நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு 

அணியான்  ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

  

பாடல் எண் : 3



வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்
சோதிகள்விட்டுச் சுடர்மாமணிகள்  ஒளிதோன்றச்
சாதிகளாய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதியாரூர் 
ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 4



குணங்கள்பேசிக் கூடிப்பாடித் தொண்டர்கள்
பிணங்கித்தம்மிற் பித்தரைப்போலப் பிதற்றுவார்
வணங்கிநின்று வானவர்வந்து வைகலும்
அணங்கன்
ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 5



நிலவெண்சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
பலரும்இட்ட கல்லவடங்கள் பரந்தெங்கும்
கலவமஞ்ஞை கார்என்று எண்ணிக் களித்துவந்து  

அலமர்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.

 

பாடல் எண் : 6



விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண்பு இலராய்த் தரியார் தலையால்  முட்டுவார்
எம்மான் ஈசன் எந்தையென்  அப்பன்  என்பார்கட்கு 

அம்மான்ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம்.  

 

பாடல் எண் : 7





செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
மைந்தர்களோடு மங்கையர்கூடி மயங்குவார்
இந்திரனாதி வானவர்சித்தர் எடுத்தேத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்.

 

 

பாடல் எண் : 8



முடிகள் வணங்கி மூவாதார் முன்செல்ல
வடிகொள் வேய்த்தோள் வானரமங்கையர் பின்செல்லப்
பொடிகள்பூசிப் பாடும்தொண்டர் புடைசூழ
அடிகள்
ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 9



துன்பநும்மைத் தொழாதநாள்கள்  என்பாரும்
இன்பநும்மை ஏத்து நாள்கள்  என்பாரும்
நும்பின் எம்மை நுழையப்பணியே என்பாரும்
அன்பன்
ஆரூர்  ஆதிரை நாளால்  அது வண்ணம். 

 

பாடல் எண் : 10



பாரூர்பௌவத் தானைபத்தர் பணிந்தேத்தச்
சீரூர்பாடல்  ஆடல் அறாத செம்மாப்பார்ந்து 

ஓரூர் ஒழியாது உலகமெங்கும் எடுத்தேத்தும்
ஆரூரன்றன் 
ஆதிரை நாளால்  அது வண்ணம்.
                              

                              திருச்சிற்றம்பலம்
                        போற்றி ஓம் நமசிவாய  
 

No comments:

Post a Comment