rudrateswarar

rudrateswarar

Saturday, April 5, 2014

சிவசிவ

                                                       ஓம் நமசிவாய

சிவசிவ 


திருமுறை பாராயணமோ அல்லது ஐந்தெழுத்து மந்திர ஜெபமோ நித்தமும் செய்ய இயலாதவர்கள் தினமும் கீழ்கண்ட பத்தாம் திருமுறை பாடலை 12 முறை ஓத வேண்டும். ஓதினால் என்ன கிடைக்கும் என்பது அப்பாடலிலேயே கருத்து வெளிப்படை  


சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.



இப்பாடலில் எண்ண சிவ எனும் மந்திரசொல் 9 முறை வருகிறது , 12 முறை சொல்ல 
9 X 12=108 வரும் .இதை நாள்தோறும் மிக எளிமையாக சொல்ல பாடலில் கூறியவாறு கிட்டும் என்பது திண்ணம் என்று திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் அவர்களின் அருள்வாக்கு. கிடைத்தற்கரிய இம்மானுடப்பிறவியை கடைத்தேற்றவும் 
இனி வரும் பிறவிக்கும் வருங்கால வைப்பு நிதியாகவும் இருக்கும் என்பது திண்ணம் .


                      போற்றி ஓம் நமசிவாய 


                          திருச்சிற்றம்பலம் 

1 comment:

  1. சிவ..சிவ என்று எய்தி
    சிவகதி நாடி இரு....மனமே !

    ReplyDelete