rudrateswarar

rudrateswarar

சனி, 12 ஏப்ரல், 2014

தொகையடியார்கள் குருபூசை


                                  ஓம் நமசிவாய

தொகையடியார்கள்  குருபூசை



பங்குனித் திங்கள் இறுதி நாளில் எட்டுத்  தொகையடியார்கள் குருபூசை  நடைபெறும் 


1.பொய்யடிமை இல்லாத புலவர் 

2.பத்தராய்  பணிவார்

3.பரமனையே பாடுவார் 

4.சித்தத்தை சிவன்பாலே வைத்தார் 

5.திருவாரூர்ப் பிறந்தார் 

6.முப்போதும் திருமேனி தீண்டுவார் 

7.முழு நீறு பூசிய முனிவர் 

8.அப்பாலும் அடிசார்ந்தார்


மற்ற எந்த நாளில் எந்த குருபூசைக்கும் சென்று கலந்து கொள்ளாதவர்கள் கூட இந்த நாளில் சென்று வணங்க அனைத்து அடியார்களையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கப்பெறும் .இந்த தொகையடியாரில் அடங்காத சிவனடியார்கள் இருக்க முடியாது. எனவே மாகேச்வர பூசை எனும் அடியாரை வணங்கும் குரு பூசை பங்குனி இறுதி நாளான 13-04-2014 ஞாயிறு அன்று வருகிறது .


அது போலவே முதல் தொகையடியாரான தில்லைவாழ் அந்தணர் குருபூசை  சித்திரை முதல் நாள் நடைபெறும் அன்று சித்ரா பௌர்ணமி நாளும் கூட .இறைவனே அடியெடுத்துக் கொடுத்த இறைவனே அடியாருள் ஒருவனாகியும் இருந்த தில்லைவாழ் அந்தணர் குருபூசையிலும் கலந்து கொள்வோமாக
  

அடியாரை வணங்குவோம் 
அரனடி சேர்வோம்



                        போற்றி ஓம் நமசிவாய 



                            திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக