rudrateswarar

rudrateswarar

Saturday, April 12, 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்


                                ஓம் நமசிவாய

புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ் கூறும் நல்ல உள்ளங்களுக்கு சிவனை சிந்தையில் வைத்து நாளும் அவன் தாள் வணங்கும் அடியார் பெருமக்களுக்கும் சிவநேய செல்வங்களுக்கும் இந்த சிறியேன் சிவனடிமையின் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்



                             திருச்சிற்றம்பலம்


வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் 
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக 
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே 
சூழ்க வையகமும் துயர் தீர்கவே .
 
 
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் 
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட 
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் 
நின்றது எங்கும் நிலவி உலகெலாம் 
 
 
வையம் நீடுக மாமழை மன்னுக 
மெய் விரும்பிய அன்பர் விளங்குக 
சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக
தெய்வ வெண் திருநீறு  சிறக்கவே


வான்முகில் வழாது பெய்க
            மலிவளம் சுரக்க மன்னன் 
கோன்முறை அரசு செய்க
           குறைவிலாது உயிர்கள் வாழ்க 
நான்மறை அறங்கள் ஓங்க
           நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி
           விளங்குக உலகமெல்லாம் 



எல்லாம் வல்ல சிவபரம்பொருளின் பேரருள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்தும் 


அடியேன் 
சிவனடிமை வேலுசாமி


                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்  

No comments:

Post a Comment