rudrateswarar

rudrateswarar

Saturday, May 4, 2013

விறன்மிண்ட நாயனார் புராணம்

                                  ஓம் நமசிவாய 


விறன்மிண்ட நாயனார் புராணம்

"விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்" 

அவதார தலம் - செங்கண்ணூர்  
முக்தி தலம்     - திருவாரூர் /வண்டாம்பாளை 
குருபூசை திருநட்சத்திரம்-சித்திரை மாதம்    
 14-05-2013 செவ்வாய்கிழமை         திருவாதிரை                                                               

மலைநாடாகிய சேரநாட்டில் வளமை மிக்க பழமையும் பெருமையும் மிக்க  ஊர் திருச் செங்குன்றூர் அத்திருநகரில் வேளாண் குலத்தில் விறன்மிண்ட நாயனார் அவதரித்தார். விறலும் மிண்டும் திருவருள் நெறியில் இவருக்கு இருந்தமையால் விறன்மிண்டர் எனப்பெற்றார் அளவிட்டு சொல்லமுடியாத சிறப்பினை  உடைய சிவபெருமானது திருவடிகளை பற்றி ஏனைய பற்றுக்களை அறவே களைந்தவர் . முடிவில்லா அன்புடையவர் உண்மையான அடியார்களிடம் திண்மையான அன்பு பூண்டவர் தணியாத காதலுடன் ஐந்தெழுத்தை ஓதி திருநீறும் கண்டிகையும் பூண்டு சிவபக்தி செய்து வருவார். நதியும் மதியும் சூடிய பெருமான் விரும்பி அமர்ந்திருக்கும் பதிகள் தோறும் சென்றுவழிபடுவார் .அவ்வாறு வழி படும் போது சிவனடியார் திருக்கூட்டத்தை முதலில் தொழுது பின்னே  பரமேசுவரனைத்  தொழுவார் 
மலைநாட்டைகடந்து ஏனைய நாடுகளில் சென்று அங்குள்ள திருக்கூட்டத்தினரைத் தொழுதும்சிவாலயங்களைச் சேவித்தும் விரிசடை விமலர் வாழும் திருவாரூரை அடைந்து பணிந்து புகழ்ந்து போற்றினார் 

சிவலோகம் போல் திகழும் தேவாசிரியன் மண்டபத்தில் அடியார் திருக்கூட்டத்தை பணிந்து அக்கூட்டத்தில் தாமும் ஒருவராக விறன்மிண்டர் இருந்தார் 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாள்தோறும் பூங்கோயில் சென்று புற்றிடங்கொண்ட திருமூலநாதரை  வழிபடும் நியதி கொண்டவர் அதன்படி அன்று திருக்கோயில் உட்புகுந்து செல்லும்போது தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருக்கும்திருக்கூட்டத்தினரைப்பார்த்து  இத்திருத் தொண்டர்கட்கு என்னை அடியேனாகச் செய்யும் நாள் எந்நாளோ? என்று இறைவரச் சிந்தித்து நேரே கோயிலினுட் புகுந்தார் அதுகண்ட விறன்மிண்டர் திருக்கூட்டத்தை அடைந்து தொழுது உட்செல்லாது ஒருவாறு ஒதுங்கிபோவது என்ன முறை என்று வெகுண்டார் .அடியாரை வணங்காது ஒதுங்கிசெல்லும் வன்தொண்டன் அடியார்க்கு புறகு அவனை வலிய ஆட்கொண்ட சிவபெருமானும் புறகு என்றார் 

அதுகேட்ட சுந்தரர் அஞ்சி ஆலமுண்ட நீல கண்டரைச் சிந்தித்து நின்றார் .சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துக் கொடுத்தருளினார்.ஞாலமுய்ய நாம் உய்ய சைவ நெறியின் சீலமுய்ய நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகையைப் பாடி திருகூட்டத்தினரை வணங்கினார் . அதை கேட்ட விறன்மிண்டர் அளவற்ற மகிழ்ச்சியடைந்து சுந்தரர் உள்ளம் அடியாரிடத்தில் பதிந்திருக்கின்றது என்று அருள் புரிந்தார் இவ்வாறு திருத்தொண்டத் தொகை பாட காரணமாயிருந்த விறன்மிண்ட நாயனாரை அவரது அளவற்ற அடியார் பக்தியை கண்டு மகிழ்ந்து சிவகணங்களின் தலைவராக திகழுமாறு அருள்புரிந்தார் 

அடியவர் பக்தியை விளக்குவது விறன்மிண்ட நாயனாரது வரலாறு சிவா பக்தியினும் அடியவர் பக்தியே திருவருளைப் பெறுவதற்கு எளிய வழி.பசுவின் பால் பெறுவதற்கு கன்றின் துணை வேண்டுவதைப்போல சிவபெருமான் திருவருள் பெற அடியவர் துணை அவசியமானது



                        போற்றி ஓம் நமசிவாய 


                             திருச்சிற்றம்பலம்           

No comments:

Post a Comment