rudrateswarar

rudrateswarar

Saturday, October 21, 2017

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 08



          போற்றி ஓம் நமசிவாய 
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 08

            திருச்சிற்றம்பலம்

கு அஞ்ஞானம் , ரு நீக்குபவர் குரு- அஞ்ஞானத்தை நீக்குபவர் . அதாவது மல நீக்கமும் சிவஞானவிளக்கமும் அளிப்பவர்.

சென்ற பதிவில் தமிழ்வேள்வி வழிபாட்டின் முன்னோடிகளின் தகுதிகள் என்ன  எவ்வாறு எனப் பார்த்தோம் .சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது ஆமாத்தூர் பதிகத்தில் முதல் பாடலில் மீண்டனன் மீண்டனன் வேத வித்து அல்லாதவர்க்கே என்று அருள்கிறார் . கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தில் 2038 ஆம் பாடலில் வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச் செந்தழல வாய நிரயத்தினிடை சேர்வார் என்று அருளியுள்ளார் . இப்படியிருக்க அவர் கோயில் கட்டினால் மட்டும் சுந்தரர் அருள் இவர்களுக்கு எவ்வண்ணம் கிட்டும் .
பொருள் பற்றும் புகழ்ப்பற்றும் தவிர இறை பக்தி இறைப்பொழுதும் இவர்களிடம் கிடையாது . தனது இனிசியலைக் கூட விடாத ஒருவர் எப்படி பந்த பாசமறுத்து நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் பெற்று சிவத்தையடைவார் அல்லது தனது சீடர்களுக்கு வழிதான் காட்டுவார் . எல்லாமே போலி வேடம் சில ஆண்டுகள் முன் திருச்சிராப்பள்ளியில் ஒரு சைவப் பெரியார் ஒருவரின் படத்தை அவரது சீடர்கள் சிவபெருமானாக சித்தரித்து போட்டுவிட்டனர் அதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும் .அந்த பெரியார் அப்படி புகழ் விரும்பியல்லர் என்று சைவ உலகமே அறியும் .அவரை இந்த ஒளியரசுவின் சீடர்கள் எவ்வளவு சீரழித்தார்கள் தெரியுமா ? இன்று இவர் படம் இவருடைய பிரதம சீடர் படம் எல்லாம் பூசையறையை அலங்கரிக்கிறது சிவத்துக்கு நிகராக மலம் நீங்கப் பெறாதவர்கள் படம்

கோவையில் ஒரு முதுமுனைவர் விஷேட தீட்சை பெற்றுள்ளார் அவர் தீட்சை கொடுக்கிறார் ? யாரோ சிலரின் ஆதரவு இருக்கிறது என்பதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா ? பிரதோஷ வழிபாடு பிறதேச வழிபாடு என்று ஒரு கட்டுரை இவர் வரைந்தது தான் எங்கேயாவது அதை பிறதேசவழிபாடு தான் என்று நிறுவியுள்ளாரா ? இல்லை. இப்படியே தான் இவர்கள் செயல்கள் இருக்கும் பிரதோசத்தை வைத்து மக்கள் ஆலயவழிபாடு மேற்கொள்வதில் இவர்கள் என்ன கஷ்டம் கண்டார்கள். தமிழ் ஆர்வலர்கள் என்றால் அத்தோடு இருக்க வேண்டியது தானே ? தமிழாளர்கள் எல்லாம் அருளாளரா ? வழிபாட்டில் தமிழ் என்று கொண்டு பொருள் சம்பாதிக்கும் ஒரே நோக்கம் கொண்டுள்ளனர் . உண்மையான பக்தி இருந்தால் இறைவன் நம்மை நோக்கிக்கொண்டுள்ளார் என்ற பயம் இருந்தால் இல்லாத நெறியை உருவாக்கிக் காசு பார்ப்பீர்கள் .? முறையாக மந்திரம் கற்க கூடாது .முறையாக திருமுறை பண்ணோடு பாட கற்கக்கூடாது ஆனால் நாங்கள் வேள்வி செய்வோம் என்பது தமிழ்ப்பற்றுமல்ல திருமுறைப்பற்றுமல்ல சிவப்பற்றுமல்ல . பொருள்பற்றே . பேருந்து நிலையத்திலும் இரயிலிலும் திரைப்படப்பாடல் பாடி காசு பெறுவோர்க்கும் உமக்கும் என்ன வேறுபாடு .

சம்பந்தர் சுவாமிகள் தன்னை தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லிக் கொள்கிறாராம் . தமிழில் பாடும்போது தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும் ? தமிழ்நாட்டைக்கடந்து தமிழ்மொழி இல்லாததால் காளத்தியிலிருந்து வடதேய தலங்களைப்பாடினார் .ஏன் மறை ஞானசம்பந்தர் என்றும் தான் சொல்லியுள்ளார் .

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்

தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த சிவபெருமான், மேலும் நீ என்னுடன் வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால், வன்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய். நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல், திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும். ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக என்றருளிச் செய்தார் .
இப்பெரியபுராணப் பாடலைச் சொல்கிறார்கள் சுவாமியே தமிழில் பாடுவது தமக்கு விருப்பம் என்று . நாமும் அதையே சொல்கிறோம் பாடுங்கள் பாடி உய்வு பெறுங்கள் வேள்விசெய்யாதீர்கள் என்று .ஏனெனில் தூமறை பாடும் வாயான் என்றதனால் ஏற்கெனெவே மறை உள்ளது அது சிவபெருமானால் சொல்லப்பட்டது என்பது புலனாகிறது. இதையே எவ்வளவு நாட்களுக்கு தான் சொல்லிக்கொண்டு திரிவீர்கள் .

        திருச்சிற்றம்பலம்

2 comments:

  1. சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
    சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
    அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
    மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

    best u can join tamil archunaiyar pattaya padipu next year in srm they clear ur all doubts tamileyyy mei matra yellam poiiiiii

    ReplyDelete
    Replies
    1. அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான் என்றதனால் அது வேதமாகாது. அங்கு மறை என்றோ வேதம் என்றோ சொல்லப்படவில்லை.ஆனால் வேதத்தை விட்ட அறம் இல்லை இடு திருமந்திரம்.வேதம் என்ற சொல்லே வடசொல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இதில் தமிழில் எப்படி வேதம் இருக்குமுடியும்.இதை சத்தியவேல்முருகனைக்கேட்டுத் தெளியவும் .சத்தியம் என்பதே வடசொல்தான்.முதலில் தன் பெயரை தமிழில் வைத்துவிட்டு ஊருக்கு தமிழ் வேதம் சொல்லலாம் . சத்யம் வத: தர்மம் சர:இது தான் வேத வாக்கு . அர்ச்சகர் என்பது திருமுறைச்சொல்லாட்சி அதை மறுப்பவன் திருமுறைகளை மறுப்பவனாவான்.திருமுறைகளை மறுப்பவன் சிவபெருமானை மறுப்பவனாவான் .சிவபெருமான் வாக்காகச் சொல்லப்படும் திருமுறைகளை மறுப்பவன் சிவத்துரோகி.தமிழன் சைவத்தில் மட்டுமல்ல கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் உள்ளான் .அவர்களிடம் சென்று நீ தமிழன் உனக்கு பைபிள்.குரான் வேதமல்ல .சதிவேல்முருகன் சொல்வது வேதம் என்று சொல்லவும். ஏன்னா சைவன் தான பருப்பும் கீரையும் தின்னுட்டு சாந்தமா இருக்கும் இளிச்சவாயன் .அந்த அரைகுறை எங்களுக்கு விளங்கவைக்குதோ

      Delete