rudrateswarar

rudrateswarar

Saturday, July 6, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் -5

                                                     ஓம் நமசிவாய

மகான் சேஷாத்திரி சுவாமிகள்

 



சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதியர்க்கு 1870ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார்

சேஷாத்திரிக்கு ஐந்து வயது இருக்கும் போது அவருடைய தாயார் மரகதம் தன் பிள்ளையை வரதராஜபெருமாள் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கோவில் வாசலில் கண்ணன் சிலை களை ஒருவன் விற்றுக்கொண்டிருந்தான். தனக்கு ஒரு பொம்மை வாங்கித்தரும்படி சேஷாத்திரி தம் தாயிடம் கேட்டார். கையில் காசில்லாத அவர் மகனின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தார். ஆனால் சிறு பிள்ளை சேஷாத்திரி விடுவதாக இல்லை. அழுது ஆர்ப்பாட்டம் செய்து,அந்த பொம்மையை வாங்கித்தர வேண்டும்  என்று பிடிவாதம் செய்தார்.நிலைமையைப் புரிந்து கொண்ட வியாபாரி அம்மா உங்கள் குழந்தை ஆசைப்படுகிறான். ஆதலால் நானே ஒரு பொம்மையை அவனுக்குத் தருகிறேன்.அதற்கு நீங்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி, சேஷாத்திரியின் கைகளில் ஒரு கண்ணன் பொம்மையை கொடுத்தான் சேஷாத்திரி அந்தப் பொம்மையை வாங்கி அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. மறுநாள் மரகதம் தன் மகனோடு கோவிலுக்கு சென்ற போது நேற்று பொம்மையை அளித்த வியாபாரி குழந்தையைப் பார்த்ததும் ஓடி வந்தான். மரகதத்திடம் அம்மா! இவன் சாதாரண குழந்தையல்ல,தெய்வீகக் குழந்தை என்றான் பக்தியோடு. மரகதம் அம்மாள் விஷயம் தெரியாமல் விழிக்க வியாபாரி விளக்கினான் அம்மா! இங்கு பல நாட்களாக நான் வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரம் இல்லாமல் நான் மிகவும் வருத்தத்துடன் நாட்களை ஓட்டிவந்தேன். நேற்று உங்கள் பிள்ளைக்கு ஒரு பொம்மை கொடுத்தேன். அவன் கரம் பட்ட நேரம் பொன்னான நேரம். என்னிடம் இருந்த எல்லா பொம்மைகளும் நேற்றே விற்றுத் தீர்ந்து விட்டன. இப்படியொரு லாபம் கிடைக்கும் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. இது சாதாரணக் கை அல்ல அம்மா தங்கக் கை என்று  தழுதழுத்த குரலில் கூறி குழந்தையைக் கும்பிட்டான். இச்செய்தி சில நாட்களில் ஊர் முழுதும் பரவ அது முதல் எல்லாரும் அவரை தங்கக் கை சேஷாத்திரி என்றழைக்கலாயினர் 


சேஷாத்திரி தனது ஐந்தாவது வயதில் வேத பாடசாலைக்கு கற்க  அனுப்பப்பட்டார். அங்கு வேதம் மற்றும் மந்திரங்கள் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி பதினான்காம் வயதை தாண்டும் முன் வேதங்களை நன்கு கற்றுக்கொண்டார். பதினான்கு வயதில் அவருடைய தந்தையார்  இறக்க அதன் பின் சேஷாத்திரி தன்னுடைய மாமாவின் ஊருக்கு சென்றார். இங்கு அவர் உபநிஷம், வேதம், ஜோதிடம்,இசை என பல கலை பயின்று தேர்ச்சி பெற்றார் . இருந்தாலும் அவர் செயல்கள் எல்லாம் சிறிது பித்துகுளித் தனமாகவும் வெகுளித்தனமாகவும் இருக்கும். அது கண்டு அவர் தாயார் இறக்கும் தருவாயில் மகனைப்பார்த்து மிகவும் வருந்தி  மகனின் கரத்தைப் பற்றி அருணாச்சலா அருணாச்சலா என்று சொல்லும் போது உயிர் பிரிந்தது சேஷாத்திரியின் பதினேழாம் வயதில் தாயும்  இறக்க பின்முழுமையாக அவரின் மாமாவின்  அரவணைப்பில் வாழ்ந்தார்.தாயின் கடைசி வாக்கு அருணாச்சலா என்ற சொல் அவர் காதில் ஏதோ மந்திரம் போல் சுற்றிச் சுற்றி வர சக்தி,அருணாச்சலேஸ்வரர் படங்களை முன் வைத்து நீண்ட நேரம் தியானம் செய்தார். பின் சேஷாத்திரி தனது பத்தொன்பது வயதில் பாலாஜி சுவாமிகளிடம் சிஷ்யனாக சேர்ந்து துறவறம் மேற்கொண்டார். பிறகுதமிழ்நாட்டில் உள்ள பல புண்ணிய தலங்களுக்கு சென்று கடைசியாக அண்ணாமலையாரின் தலமான திருவண்ணாமலை வந்தடைந்தார். 

சேஷாத்திரி தியானம் செய்ய  தனியாக எந்த இடத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அங்கு, இங்கு சென்று தியானம் செய்வார். அவருக்கு மிக பிடித்த இடங்கள் கம்பத்திளை யனார் கோயில்,திரௌபதியம்மன் ஆலயம்
யோகேஸ்வர மண்டபம், பாதாளலிங்கம் ஆகியன .நாள்தோறும் கிரிவலம் செல்லுவதை வழக்கமாக்கி கொண்டார்.அவர் பெற்ற அருளால் திருவண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றை அடுத்த பதிவில் தொடர்வோம் 

                                       அற்புதங்கள் தொடரும் 


                             போற்றி ஓம் நமசிவாய


                                 திருச்சிற்றம்பலம்   

No comments:

Post a Comment