rudrateswarar

rudrateswarar

Saturday, July 6, 2013

அண்ணாமலையார் அற்புதங்கள் - 7

                                     ஓம் நமசிவாய

 
மகான் சேஷாத்திரி சுவாமிகள்

ஒருமுறை சேஷாத்திரி சுவாமிகள் மண்டப வாயிலில் அமர்ந்திருந்த போது பக்தர் ஒருவர் அவருக்கு உணவு பொட்டலம் ஒன்றை கொடுத்து உண்ண வேண்டினார்.அவர் அந்த பொட்டலத்தில் இருந்து சிறிது உணவை எடுத்து உட்கொண்டவர் திடீரென்று என்ன நினைத்தாரோ மீதம் இருந்த உணவை மேலும் கீழும் அள்ளி வீசினார். உணவைக்  கொடுத்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை உணவை ஏன் இப்படி வீணாக்குகிறீர்கள் என்று கேட்க அவருக்கு பயமாக இருந்தது. ஆனாலும் உணவை உண்ணாமல் இப்படி கீழே இறைக்கிறீர்களே ஏன் சுவாமி என்று கேட்டார் அதற்கு சேஷாத்திரி சுவாமிகள் நீ எனக்கு தந்த உணவை பூதங்களும் தேவதை களும் கேட்கிறார்கள் அதனால் தான் இப்படிச் செய்கிறேன் என்றவர் மீண்டும் பொட்டலத் தில் இருந்த உணவை அள்ளி வீசினார்.

பக்தருக்கோ ஒன்றும் புரியவில்லை சுவாமி நீங்கள் சொல்லும் "பூதம் தேவதைகள்" என் கண்களுக்கு தெரியவில்லையே? என்று சற்று கிண்டலுடன்கேட்டார் உடனே சுவாமிகள் அந்த பக்தரை சற்று முறைத்து  "பூதம், தேவதைகளை காணவில்லை என்கிறாய் அப்படித்தானே ?" ஆமாம் என்றார் பக்தர்
"அப்படி என்றால் அவற்றை உனக்கு காட்டு கின்றேன்" என்ற சுவாமிகள் அந்த பக்தரின் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது கட்டைவிரலை வைத்து சிறிது அழுத்த பக்தர் கண்களை மூடிக்கொண்டார் .பிறகு"இப்போது பார்" என்றார் சுவாமிகள்

பக்தர் கண்களை திறக்க அங்கே அவர் கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தின  சுவாமிகள் வீசி எறிந்த உணவை கோரைப்பற் களும் தொங்கிய நாக்கும் இருந்த பூதங்கள் வேகமாக எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தன கிண்டல் பேசிய பக்தரை அவை முறைத்தன.
அது கண்ட பக்தர் பயத்தில் நடுங்கினார் 
சேஷாத்திரி சுவாமிகளும் சிரித்துக்கொண்டே இப்போது புரியுதா? இனிமே சந்தேகப்படாதே என்று கூறியபடி பக்தரின் புருவ மத்தியில் இருந்து தனது விரலை எடுத்தார்.தவறுக்கு வருந்தி அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு வேண்டினார் பக்தர்.
 
அடியவர்கள் சிலரது வீடுகளில் சேஷாத்திரி சுவாமிகள் திடீர் என போய்த்தங்குவதுண்டு. முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் போய்த் தங்குவதே அவர் வழக்கம்.தங்கள் வீட்டில் தங்க மாட்டாரா என்று ஏராளமான பேர் காத்து கொண்டிருப்பார்கள்.யார் தூய்மையான வாழ்க்கை வாழ்பவர் யார் உண்மையான பக்தி கொண்டவர் என்றும் சுவாமிகளுக்குத் தெரியும்.வருந்தி அழைப்பவர்களின் வீடு களையெல்லாம் விட்டுவிட்டுத் தாம் விரும்பு கிறவர் வீட்டுக்குத் திடீரென்று போய் நிற்பார் 
மொட்டை மாடி இருக்கும் வீடானால் அவருக்கு ஆனந்தம். இரவு மொட்டை மாடி யில் போய் உறங்குவார். "தான் உறங்கும் போது, இரவு மாடிக்கு யாரும் வரக்கூடாது!' என்ற நிபந்தனையில் மட்டும் கண்டிப்பாக இருப்பார். "இவரோ முற்றும் துறந்த துறவி. அப்படியிருக்க இரவு ஏன் யாரும் மாடிக்கு வந்து தன்னைப் பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்?' என ஓர் அன்பருக்கு சந்தேகம். ஒருநாள் நள்ளிரவு யாரும் அறியாதவாறு மாடிக் கதவைத் திறந்து கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றார். நிலவொளியில் அவர் கண்ட காட்சியால் அவரது கை கால்கள் கிடு கிடுவென நடுங்கின. விழிகள் வியப்பிலும் அதிர்ச்சியிலும் விரிந்தன.சுவாமிகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எல்லோரையும் போல் உறங்கவில்லை. கால்கள் இரண்டும் ஒரு பக்கம் தனியாகவும்  கைகள் தனியாக வேறொரு பக்கமும்  தலை, உடல் ஆகியவையும் தனித்தனியாகவும்  வெவ்வேறு பக்கம் சாய்ந்திருந்தன. என்ன இது ! யாராவது சுவாமிகளை கண்டந்துண்ட மாக வெட்டி வீசிவிட்டார்களா? என்று அந்த காட்சியை கண்டவரின் நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது. நடுக்கத்தோடு மாடிக் கதவை சாத்தி விட்டு பயந்து கீழே வந்து படுத்துக் கொண்டார் உறக்கம் வராமல் இறைவன் நாமத்தை கூறியவாறு இரவைக் கழித்தார்.
 
மறுநாள் காலை ஆனந்தமாக வழக்கம்போல் மொட்டை மாடியை விட்டு இறங்கி வந்தார் சுவாமிகள் அந்த அன்பரைப் பார்த்து, "என்ன ரொம்ப பயந்து விட்டாயோ? நல்லதுதான். அதனால்தானே ராத்திரியெல்லாம் பகவான் நாமாவை ஜபித்தாய்! மொட்டை மாடிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே? அப்படியிருக்க ஏன் வந்தாய்?'' என்று நகைத்த வாறே அவரிடம் கேட்டார்."தெரியாமல் செய்து விட்டேன் சுவாமி!'' என்று அவர் மெய் சிலிர்க்க சுவாமிகளை நமஸ்கரித்தார்.
 
திருவண்ணாமலையில் இருந்த நாவிதர்கள்  சேஷாத்ரி சுவாமிகளை மிகவும் பிடித்தது அதற்கு காரணம் சேஷாத்திரி சுவாமிகள் நிகழ்த்திய ஒரு அற்புதம் தான். திடீரென்று ஒரு நாவிதர்முன் போய் அமர்ந்து "எனக்கு மொட்டை போட்டு விடு! என்று கேட்பார். அந்த நாவிதருக்கு மிகுந்த ஆனந்தம் ஏற்படும் ஏனென்றால் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அனுபவத்தில் அறிந்திருப்பார் அந்த நாவிதர். பய பக்தியோடு கத்தியைத் தீட்டி சுவாமிகளின் தலைமுடியை மழிப்பார். முடி எடுத்ததும் சுவாமிகள் சிரித்துக் கொண்டு   குளிக்கச் சென்றுவிடுவார். அவ்வளவு தான். அன்று அந்த நாவிதருக்குக் கை வலிக்கும் அளவு தொழில் நடக்கும். ஏராளமான பேர் அவரிடம் முகச்சவரம் செய்துகொள்ளவும் முடியிறக்கவும் என்று தேடி வருவார்கள். ஒரு மாதத்தில் நடக்காத தொழிலை ஒரே நாளில் நடத்திச் சம்பாதித்து விடுவார் அவர்.
இந்த அனுபவத்தால் சில நாவிதர்கள் சுவாமி களைப் பார்த்தால்,தலைமுடி மழிக்கவா? என ஆவலோடு கேட்பார்கள். அவர் நினைத்தால், தான் நினைத்த நாவிதரிடம் தானே போய் உட்கார்ந்து கொள்வார்.
 
அப்படி ஒருநாள் ஒரு நாவிதரிடம் போய் அமர்ந்தார் சேஷாத்திரி சுவாமிகள் அந்த நாவிதர் கடவுள் பக்தி கொண்ட தொழிலாளி. பிரியமாக அவரது தலைமுடியை மழித்தார். சுவாமிகள் சிரித்துக்கொண்டு சென்று விட்டார்.அன்று ஏராளமான பேர் தன்னிடம் முடி மழிக்க வருவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தார் நாவிதர். என்ன வினோதம்! அன்று ஒரே ஓர் ஆள்கூடத் தேடி வரவில்லை. இன்று ஏன் தொழிலே நடக்கவில்லை?' என சிந்தித்தவாறே கடையடைத்து  வீட்டுக்குப் புறப்பட்டார் நாவிதர்.அப்போது ஓர் அற்புதம் நடந்தது. காற்று ஒரு பெரிய தொகையைப் புரட்டிக் கொண்டு வந்து அவர் காலடியில் சேர்த்தது. காலின் கீழ் ஏதோ காகிதம் படபடக் கிறதே என்று எடுத்துப் பார்த்த நாவிதர், ஒரு பெருந்தொகை தனக்கு அருளப்பட்டிருப்பதை எண்ணிப் பூரித்தார். சேஷாத்ரி சுவாமிகளை மனதார வணங்கி அந்தப் பணத்தை கண் களில் ஒற்றி எடுத்துக் கொண்டார். 
 
1928-ஆம் வருடம் கார்த்திகை மாதம் ஒரு நாள் தன் பக்தையான சுப்புலட்சுமியிடம் இந்த வீட்டை விட்டுப் புதிய வீட்டிற்குப் போக நினைக்கிறேன் என்று கூற அந்த அம்மா முதலில் மிகவும் குழம்பிப் போய்விட்டார். சுவாமிகள் ஏதோ விளையாட்டாய் சொல்வ தாய் நினைத்துள்ளார். ஆனால் திரும்பத் திரும்ப சுவாமிகள் இந்தக் கேள்வியையே கேட்கவும், ஆம் புதியதோர் வீடுகட்டி அங்கே யோகப் பயிற்சிகள் செய்யலாம் என்றாராம். அந்த அம்மாவின் வார்த்தைகளை பராசக்தி யின் கட்டளையாக ஏற்ற சுவாமிகள். சரி, அப்படியே செய்வோம் என்றார். சிலநாள்  கழித்து அவர் பக்தர்கள் சிலருக்கு சுவாமி களை போட்டோ படம் பிடித்து வைக்கலாம்  எனத் தோன்றியது. ஆகவே துணிமாற்றாமல், குளிக்காமல் இருந்த சுவாமிகளை எப்பாடு பட்டாவது குளிக்க வைத்துப் புதுத்துணி உடுத்த வைக்கவேண்டும் என அவருடைய சில சீடர்கள் நினைத்தனர். தலையில் எண்ணெய் வைத்துத் தேய்த்துக் குளிப்பாட்டி னார்கள்.சுவாமிகள் வேண்டாம் என மறுத்தும் அவர்கள் கேட்காமல் எண்ணெய் தேய்த்துக்குளிப்பாட்டி,புதுத்துணிஅணிவித்து, மாலை போட்டுப் படமும் பிடித்தார்கள். ஆனால் சேஷாத்திரி சுவாமிகளுக்கு அதன் பின்னர் உடல்நலம் மொத்தமாய்க் கெட்டுப் போய் நல்ல காய்ச்சல் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்தது. 41-ஆம் நாள் அண்ணாமலையாரைத் தரிசிக்கச் சென்றார் சுவாமிகள். அதுவே அவருடைய கடைசி தரிசனமாகும். திரும்பும்போது தேங்கி இருந்த நீரில் அப்படியே உட்கார்ந்து கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தார். மெல்ல மெல்ல உடல்நிலை மோசமாகி 1929-ஆம் வருடம் ஜனவரி மாதம் 4-ஆம் தேதி சுவாமிகளின் உடலில் இருந்து உயிர்ப்பறவை பறந்தது. திருவண்ணாமலையே சோகத்தில் ஆழ்ந்தது. மக்கள் கூட்டம் தாங்கமுடியாமல் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. திருவண்ணாமலைக் கடைகளில் இருந்த கற்பூரம் அனைத்தும் வாங்கி  எரிக்கப்பட்டுக் காணக்கிடைத்த ஜோதியில் இரவே பகலாய் மாறிவிட்டது. வெளியூர்களில் இருந்தெல் லாம் பக்தர்கள் கடைசி தரிசனத்திற்கு வந்து குவிந்தார்கள். 
 
காஞ்சி பெரியவர் சொல்வாராம் நான் சேஷாத்திரி மாதிரி உட்கார்ந்திருக்கிறேனா? என்று.அவ்வளவு பெரிய மகான் இவரை போற்றுகின்றார் என்றால் அவர் பெற்ற திருவருள் பேறு தான் என்னே ? 
 
 
                                        அற்புதங்கள் தொடரும் ....

 
                         போற்றி ஓம் நமசிவாய 
 
 
                              திருச்சிற்றம்பலம் 
 
 
                                           

No comments:

Post a Comment