rudrateswarar

rudrateswarar

Saturday, August 10, 2013

உயிர்ப்பயணம்

                                 ஓம் நமசிவாய 



உயிர்ப்பயணம் 


உயிர் எனும் ஆன்மா இந்த உடம்பை விட்டு நீங்கும் வாயில்கள் பதினொன்று எனவும் அது நீங்கும் வழியை வைத்து அந்த உயிரின் பிறப்பு அதன் எதிர்காலம் எப்படி அமையும் என்றும் நம் பெரியவர்கள் அருளியுள்ளார்கள் 

1.மிகுந்த பாவம் செய்தவனுக்கு மலத்துடன் மலவாயில் உயிர் பிரியும், பிரிந்த அந்த உயிர் நரகங்களில் சென்று கீழ்ப்பட்ட பிறவிகளில் பிறந்து உழலும்

2.பாவம் செய்தவனுக்கு நீர்வாயில் (சிறுநீர் பாதையில் )உயிர் பிரியும் அவ்வாறு  பிரிந்த உயிர் மறுபிறப்பில் காமியாய் திரியும் .

3.பாவம் பெரிதும் புண்ணியம் சிறிதும் செய்த உயிர் நாபி வழியே பிரியும் அந்த உயிர் வறுமையிலும் நோயாளியாகவும் அங்க ஊனத்துடனும் பிறக்கும் 

4.பாவமும் புண்ணியமும் செய்த உயிர் வாய் வழியே பிரியும் அவ்வாறு பிரிந்த உயிர் மறு பிறப்பில் மிகுந்த உணவு உண்ணுவதாயும் உணவு மேல் பெருவிருப்பு கொண்டதாயும் பிறக்கும் 

5,6.இரண்டு நாசிகளின் வழியே உயிர் பிரிந்தால் அது அதிக பாவம் செய்யாதது ஆகும் அது அடுத்த பிறவியில் நறுமணம் விரும்பும்.

7,8.இரண்டு செவிகளின் வழியே பிரிந்த உயிர் புண்ணியம் செய்த உயிர் .அந்த உயிரானது மறுபிறவியில் கேள்விச் செல்வம் மிகவும் உடையதாக வாழும் இயல் இசை கேட்பதில் காலம் கழிக்கும் 

9,10.மிகுந்த புண்ணியம் செய்த உயிர் இடக்கண் ,வலக்கண் வழியே பிரியும் மறு பிறப்பில் அந்த உயிர் கல்வி செல்வம் என சகலபாக்கியங்களும் பெற்று உயர்வுடன் வாழும் 

11.சிவயோக நெறியில் நின்ற ஆன்மாவானது  உடம்புக்கு எடுத்து வந்த பிராரப்தங்களை கழித்து பின் பலகாலம் செய்த சாதகத்தால் சுழுமுனை நாடி வழியே பிராணனை செலுத்தி பிரமரந்திர வழியைத் திறந்து மேலைப்பெருவெளியில் நிறுத்தி கபால வெளியே திறந்து கொண்டு ஒளிமயமாகச் செல்லும் .அந்த உயிருக்கு பிறவி கிடையாது முக்தி பேறு எனும் பெருவாழ்வு பெறும்.

யோகம் என்பது பிராண வாயுவைப் பிடித்து வெளியே விடாமல் அடக்கிச் செய்யும் முறை ஹடயோகம் எனப்படும் .அது ஞான நெறி முறை அல்ல 

சிவயோகம் என்பது பிராணவாயுவை தொடர்ந்து சஞ்சரிக்க செய்து இடைபிங்கலை நாடிகளில் செல்லாமல் தடுத்து சுழுமுனை நாடியில் செலுத்தி உடல் வேறு தான் வேறாக உயிர் பிரிந்து நிற்கும் வகையாகும்.இந்த வகை யோகமே சிவஞானம் பெற்று முக்தி நிலையை அடையச்செய்யும்

இதற்கு உதாரணமாக பெருமிழலைக்குறும்ப நாயனாரை கூறலாம்


                         போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்   

No comments:

Post a Comment