rudrateswarar

rudrateswarar

Thursday, August 29, 2013

செருத்துணை நாயனார் புராணம்

                                             ஓம் நமசிவாய


 செருத்துணை நாயனார் புராணம்

 
 
               
          "மன்னவனாம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்"


அவதார தலம் - கீழ் தஞ்சை 
முக்தி தலம் -திருஆரூர்
குருபூசை திருநட்சத்திரம் -ஆவணி ,பூசம் 
02-09-2013 திங்கள் கிழமை

 
அறம் வழுவாத பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் திருமரபில் செருத்துணை நாயனார் வந்தார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அபச்சாரம்செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார் இல்லாவிடில் தண்டிப்பார். 
ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவ அரசன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி பூமாலை தொடுக்கும் மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். 
 
அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியின் செயல் கண்டு சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்தது சிவாபராதம் என்று கருதி ஓடி வந்து அரச மாதேவியாரின் கூந்தல் பற்றி இழுத்துக் கீழே தள்ளி மூக்கைப் பிடித்து அறுத்தார் 
 
 

கடிது முட்டி மற்றவள்தன்
           கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
           பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்டபத்து  
           மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
           அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்
 
 
அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்த வற்றை உரைத்து தமது செயலை  விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலை வணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வன்மீகநாதரின் திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பலகாலம்  புரிந்து முடிவில் செருத்துணை நாயனார் 
இறைவனடி சேர்ந்து முடிவிலா இன்பமுற்றார் 


                 
                        போற்றி ஓம் நமசிவாய
 
 
 
                              திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment