rudrateswarar

rudrateswarar

Friday, August 30, 2013

அதிபத்த நாயனார் புராணம்

                                 ஓம் நமசிவாய


அதிபத்த நாயனார் புராணம்

 
 
               
               "விரிதிரை சூழ் கடல் நாகை அதிபத்தற் கடியேன்"



அவதார தலம் - திரு நாகை  
முக்தி தலம்     - திரு நாகை  
குருபூசை திருநட்சத்திரம் - ஆவணி  ஆயில்யம் 
03-09-2013 செவ்வாய்க்கிழமை

சோழநாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகப்பட்டினமும் இரு பெரும் வாணிப நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகையம்பதியின் கடற்கரை ஓரத்தில் நுளைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது. இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்துவரும் அதிபத்தர் முதல் மீனை சிவபெருமானுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.


 முட்டில் மீன்கொலைத் தொழில்
          வளத் தவர்வலை முகந்து
பட்ட மீன்களில் ஒருதலை
          மீன்படுந் தோறும்
நட்ட மாடிய நம்பருக்
          கெனநளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாதஅன்
          புடன்என்றும் விருப்பால்.  



எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த ஒரு மீனையும் இறைவனுக்கு என்று  கடலுக்குள் வீசிவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்புவார். இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்த செல்வம் சிறுகச் சிறுகக் குறைந்தது 


சால நாள்கள்இப் படிவரத்தாம்                                              உணவயர்த்துக்
கோல மேனியுந் தளரவுந்
           தந்தொழில் குறையாச்
சீல மேதலை நின்றவர்
          தந்திறந் தெரிந்தே
ஆல முண்டவர் தொண்டர்அன்
          பெனும்அமு துண்பார். 



ஒருநாள் அதிபத்த நாயனார் வீசிய வலையில் விசித்திரமான மீன் ஒன்று கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அப் பொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. 

ஆன நாள்ஒன்றில் அவ்வொரு
           மீனுமங் கொழித்துத்
தூநி றப்பசுங் கனகநற்
           சுடர்நவ மணியால்
மீனு றுப்புற அமைத்துல
           கடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியதொன்
           றிடுவலைப் படுத்தார்



வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்க வில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்று மற்றற்ற  மகிழ்ச்சி யோடு இறைவனை நினைந்து அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார். அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது. இறைவன் உமையுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் 



                          போற்றி ஓம் நமசிவாய 



                               திருச்சிற்றம்பலம் 




 

No comments:

Post a Comment