rudrateswarar

rudrateswarar

Thursday, August 8, 2013

ஒன்று இரண்டு மூன்று ..... விடம் தீர்த்த பதிகம்

                                 ஓம் நமசிவாய 


ஒன்று இரண்டு மூன்று .....
  
விடம் தீர்த்த பதிகம்
  

விடம் தீர்த்த பதிகம் அப்பர் சுவாமிகளின் தேவாரப்பதிகம் இது .இறைவனை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி பாடி அருளியுள்ளார். பதிகப்பலன் விடம் நீங்குதல் குழந்தைகளுக்கு ஏற்படும் விஷகடி மற்றும் தீங்குகள் நீங்கும்

                              திருச்சிற்றம்பலம்

ஒன்றுகொ லாம் அவர் சிந்தை யுயர்வரை
ஒன்றுகொ லாம் உ ய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாம் இடு வெண்டலை கையது
ஒன்றுகொ லாம் அவர் ஊர்வது தானே.  




இரண்டுகொ லாம் இமை யோர்தொழு பாதம்
இரண்டுகொலாம் இலங்கும் குழைபெண்ணாண்
இரண்டுகொ லாம் உரு வம் சிறு மான்மழு
இரண்டுகொ லாம் அவர் எய்தின தாமே.




  
மூன்றுகொ லாம்அவர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாம்அவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாம்கணை கையது வில் நாண்
மூன்றுகொ லாம்புரம்  எய்தன தாமே.




நாலுகொ லாம்அவர் தம்முகம்  ஆவன
நாலுகொ லாம்சன னம்முதல்  தோற்றமும்
நாலுகொ லாம்அவர்  ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாம்மறை பாடின தாமே.




அஞ்சுகொ லாம்அவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாம்அவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாம்அவர் காயப்பட் டான்கணை
அஞ்சுகொ லாம்அவர் ஆடின தாமே.





ஆறுகொ லாம்அவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாம்அவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாம்அவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாம் சுவை யாக்கின தாமே.





ஏழுகொ லாம்அவர்  ஊழி படைத்தன
ஏழுகொ லாம்அவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாம்அவர்  ஆளும் உலகங்கள்
ஏழுகொ லாம் இசை யாக்கின தாமே.





எட்டுக்கொ லாம்அவர்  ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாம்அவர் சூடும்  இனமலர்
எட்டுக்கொ லாம்அவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாம் திசை யாக்கின தாமே.





ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில்  நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடம்  தானே.





பத்துக்கொ லாம் அவர்பாம்பின் கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்துக்கொ லாம் அவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாம் அடி யார்செய்கை தானே.




                         திருச்சிற்றம்பலம் 


                 போற்றி ஓம் நமசிவாய



No comments:

Post a Comment