rudrateswarar

rudrateswarar

Tuesday, October 8, 2013

நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -1

                                                         ஓம் நமசிவாய

நட்சத்திரத்திருமுறைப்  பாடல்கள் -1

எல்லா திருமுறைப்பாடல்களுமே மந்திர ஆற்றல் கொண்டவையே . இருந்தாலும் சில பாடல்களை 27 நட்சத்திரத்துக்கேற்றவாறு தொகுத்து அளித்துள்ளோம் . அவரவர் நட்சத்திரம் வரும் நாட்களில் அந்தந்த திருமுறைகளை ஓத நலம் பயக்கும்.

                        திருச்சிற்றம்பலம் 


1.அசுபதி  

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்து
              உன்றன் சரண்புகுந்தேன்
எக்காத லெப்பய னுன்றிறம் 

              அல்லா லெனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா மிக

               வட மேருவென்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து

               உறையுஞ் சிவக்கொழுந்தே.  4-96-9  

2.பரணி 
  
கரும்பினு மினியான் றன்னைக்காய்
               கதிர்ச் சோதி யானை
இருங்கடலமுதந்தன்னை

              இறப்பொடு  பி றப்பிலானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் 

               பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்  

               அழகிதா நினைந்த வாறே.  4-74-3


3.கார்த்திகை 


செல்வியைப் பாகங் கொண்டார் 
              சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு மா

               மலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத காஞ்சி

               மா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் 

               இலங்குமேற் றளிய னாரே. 4-43-8


4.ரோகிணி 

எங்கே னும்மிருந்துன் னடியேன் 
             உனைநினைந்தால்
அங்கே வந்தென்னொடும் 

             உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை யறுத்திட்டு           

              எனையாளுங்
கங்கா நாயகனே கழிப்
               பாலை மேயானே.        7-23-2 


5.மிருகசீரிடம் 


பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
         பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
         என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
         மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
          கயிலை மலையானே போற்றி போற்றி 

                                                        6-55-7

 6.திருவாதிரை 


கவ்வைக்கடல் கதறிக்கொணர்
             முத்தங்கரைக் கேற்றக்
கொவ்வைத்துவர் வாயார்குடைந்
              தாடுந்திருச் சுழியல்
தெய்வத்தினை வழிபாடுசெய்
              தெழுவார்அடி தொழுவார்
அவ்வத்திசைக் கரசாகுவர்
              அலராள் பிரியாளே   7-82-3 


7.புனர்பூசம் 

மன்னு மலைமகள் கையால் 
              வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறுந் தூப்

              பொரு ளாயின தூக்கமலத்
தன்ன வடிவின வன்புடைத் 

              தொண்டர்க் கமுதரும்பி
இன்னல் களைவன இன்னரம்பரான்

              தன் இணையடியே .        4-100-1



                             திருச்சிற்றம்பலம்


                      போற்றி ஓம் நமசிவாய
  

No comments:

Post a Comment