rudrateswarar

rudrateswarar

Friday, October 11, 2013

நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

                                                            ஓம் நமசிவாய 

  
நரசிங்க முனையரைய நாயனார் புராணம்




                "மெய்யடியன் நரசிங்க முனையரையற் கடியேன்"

அவதார தலம் - திருநாவலூர் 
முக்தி தலம்     -
திருநாவலூர்
குருபூசை திருநட்சத்திரம் - புரட்டாசி சதயம் 
15-10-13 செவ்வாய்க்கிழமை




சீரும் சிறப்புமிக்கது  திருமுனைப்பாடி நாடு நமது சமய குரவர்கள் இருவர் பிறந்த மண் அப்பரும் சுந்தரரும் அவதரித்த புண்ணிய பூமி அந்நாட்டை நரசிங்கமுனையரையர்  எனும் சிவத்தொண்டர் சைவநெறி வழிகாத்து மாண்போடு ஆண்டு வந்தார். எம்பெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்க்கும் அரும் பெரும் பேற்றை பெற்றவர். 

சிவனடியார்களைக் கண்டால் எதிர்கொண்டு இறைஞ்சி இனிது உபசரிப்பார் . சிவாலயங்க ளில் பல நிபந்தங்கள் அமைத்து காலம் தோறும் வழிபாடுகள் வழுவாது நடைபெறு மாறு செய்வித்தார் நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாக நடத்துமாறு செய்தார் நல்விழாக்கள் நடத்தினார்


திருவாதிரை நாள் தோறும் சிவமூர்த்தியை மிகவும் சிறப்பாக வழிபாடு செய்து மகிழ்வார்  ஒரு திருவாதிரைத் திருநாளன்று மன்னர் வழக்கம்போல் அடியார்களுக்குப் பொன்னும், பட்டாடைகளும் வழங்கிப் கொண்டிருந்தார். அப்பொழுது மன்னரிடம் பொருள் பெற்றுப் போக வந்த ஒருவர் காம நோயால் உடல் சீர் கெட்டு நோய் பெற்ற நிலையில் காணப் பட்டார். அவரைப் பார்த்து பலரும் அருவருப் படைந்து விலகிச் சென்றனர். மன்னர் அடியார்களிடம் இவரை நீங்கள் வெறுக்க கூடாது எந்த நிலையில் உள்ளவராயினும் திருநீறு அணிந்தவரை இகழ்ந்தால் நரகமே விளையும் ஆகவே திருநீறு பூசியவர் எவராயினும் பூசிக்க வேண்டும் தூசிக்க கூடாது என்று அறிவுரை கூறினார் . மன்னர் அடியாரது ரோகம் பிடித்த மேனியில் தூய திருவெண்ணீறு துலங்கக் கண்டு விரைந்து அவர்பால் சென்று அவரைக் கரங்குவித்து வணங்கி ஆரத்தழுவி அகமகிழ்வோடு வரவேற்றார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து அனுப்பி வைத்தார். திருவெண்ணீற்றுக்குப் பேரன்புடையவராய்த் திகழ்ந்த நரசிங்க முனையரைய நாயனார் சிவபெருமான் சேவடிக்கமலங்களை அடையும் அமர வாழ்வைப் பெற்றார்



                       போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment