rudrateswarar

rudrateswarar

Sunday, October 13, 2013

நீ நாளும் நன்னெஞ்சே நினை

    
                              ஓம் நமசிவாய


 நீ நாளும் நன்னெஞ்சே நினை


இறைவனை நாம் எல்லா நாளும் எல்லா நேரமும் நினைக்க வேண்டும். எந்த நேரம் நினைத்தால் என்ன சொல்லி வாழ்த்தி நினைக்கலாம் என்று சில திருவாசக போற்றி திருஅகவல்களை தொகுத்துள்ளோம் . நம் ஒவ்வொரு செயல் செய்யும் போதும் அந்த செயல் திருவருள் துணையுடன் சிறப்பாக முடிய சிவசிவ என்று நம் நா உச்சரிக்க வேண்டும் .சம்பந்தர் மூர்த்தி சுவாமிகள் திருச்சாய்க்காடு தேவாரத்தில் நீ நாளும் நன்னெஞ்சே என்று அருளியுள்ளார்


காலையில் உறங்கி  எழும்போது

அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
கண்ணார் அமுதக் கடலே போற்றி


ஆலய கோபுரம் மற்றும் இறை தரிசனம் காணும்போது


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


உணவு உண்ணும்போது


தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி 
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி 


மன அச்சம் நீங்க 


அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி 

புத்துணர்ச்சி பெற 


ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி 

உறங்க செல்லும் போது 

ஆடக மதுரை அரசே போற்றி 
கூடல் இலங்கு குருமணி போற்றி




                             திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

No comments:

Post a Comment