rudrateswarar

rudrateswarar

Sunday, October 13, 2013

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -2

                                                        ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப்  பாடல்கள் -2


8.பூசம்

பொருவிடை யொன்றுடைப் 
             புண்ணியமூர்த்தி புலியதளன்
உருவுடை யம்மலை மங்கை 

              மணாளனுலகுக்கெல்லாம்
திருவுடை யந்தணர் வாழ்கின்ற 

              தில்லைச்சிற் றம்பலவன்
திருவடி யைக்கண்ட கண்கொண்டு 

              மற்றினிக் காண்பதென்னே.  4-80-2


9.ஆயில்யம் 

கருநட்ட கண்டனை யண்டத் 
              தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதி லெய்ய

             வல்லானைச் செந்தீமுழங்கத்
திருநட்ட மாடியைத் தில்லைக்கு
             இறையைச்சிற் றம்பலத்துப்
பெருநட்ட மாடியை வானவர் 

             கோனென்று வாழ்த்துவனே. 4-81-1


10.மகம்  

 பொடியார் மேனியனே புரி
          நூலொரு பாற்பொருந்த
வடியார் மூவிலைவேல் வள
          ரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கட
          வூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்
          கார்துணை நீயலதே.     7-28-1



11.பூரம் 

நூலடைந்த கொள்கையாலே 
           நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க 

           நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழன்மேவி ய

          அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் 

         சேய்ஞலூர் மேயவனே       1-48-1 


12.உத்திரம் 


போழும் மதியும் புனக்கொன்றை
             புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
             உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
             வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழுந் திரைக்கா விரிக்கோட்டத்
             ஐயா றுடைய அடிகேளோ    7-77-8



13.அஸ்தம்


வேதியா வேத கீதா விண்ணவர்  
          அண்ணா வென்றென்
ஓதியே மலர்கள் தூவி யொருங்கி

          நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் 

          படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே யால வாயில் அப்பனே 

          அருள்செ யாயே.     4-62-1


14.சித்திரை 


நின்னடியே வழிபடுவான் நிமலா
           நினைக் கருத
என்னடியானுயிரைவவ்வேலென்று                    

            அடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடு

          நீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் 

          நெடுங்களமே யவனே    1-52-3



                           திருச்சிற்றம்பலம்



                      போற்றி ஓம் நமசிவாய  

No comments:

Post a Comment