rudrateswarar

rudrateswarar

Sunday, October 13, 2013

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் - 4


                                 ஓம் நமசிவாய


நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3


22.திருவோணம் 

வேதமோதி வெண்ணூல்பூண்டு 
            வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் 

           புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு 

           நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் 

           பழன நகராரே.    1-67-1

23.அவிட்டம்  

எண்ணு மெழுத்துங் குறியும் 
            அறிபவர் தாமொழியப்
பண்ணி னிசைமொழி பாடிய 

            வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் 

            பிரான் திருவேதிகுடி
நண்ண அரிய வமுதினை 

            நாமடைந் தாடுதுமே.  4-90-6 


24.சதயம்

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக்
           கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
          அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
           வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
           பாசுப தாபரஞ் சுடரே    7-69-2







25.பூரட்டாதி

முடிகொண்ட மத்தமும் முக்கண்ணின்     
             நோக்கும் முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த 

             வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் 

             தோலுமென் பாவிநெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை யம்பலக் 

             கூத்தன் குரைகழலே 4-81-7


26.உத்திரட்டாதி 

 நாளாய போகாமே நஞ்சணியும்    
             கண்டனுக்கே
ஆளாய வன்புசெய்வோம்  மடநெஞ்சே     

             அரன் நாமம்
கேளாய்நங் கிளை கிளைக்கும்  

             கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி

             எம் பெருமானே   1-62-1 


27.ரேவதி 

நாயினுங் கடைப்பட் டேனை 
         நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே 

           அமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே 

            நிலாவினாய்  நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்  

           நோக்கி நீ அருள்செய்வாயே  4-76-6


                           திருச்சிற்றம்பலம் 


                       போற்றி ஓம் நமசிவாய     

No comments:

Post a Comment