rudrateswarar

rudrateswarar

Sunday, October 13, 2013

நட்சத்திரத் திருமுறைப் பாடல்கள் -3


                                 ஓம் நமசிவாய 

நட்சத்திரத்திருமுறைப் பாடல்கள் -3

15.சுவாதி 

காவினை யிட்டுங் குளம்பல 
           தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயின் மூன்றெரித்தீர் 

           என்றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி 

           போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றா

           திரு நீலகண்டம்.   1-116-2

 16.விசாகம் 

விண்ணவர் தொழுதேத்த நின் றானை
           வேதந்தான் விரித்தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன்றன்னை
            நாளும் நாம் உகக்கின்ற பி ரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
           என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக்கம்பன் எம்மானைக்
           காணக் கண்அடியேன்பெற்றவாறே    7-61-7


17.அனுஷம் 

மயிலார் சாயன் மாதோர் பாகமா
எயிலார் சாய வெரித்த வெந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே. 1-23-5



18.கேட்டை

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை யம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லையேற்றினர் கோடிகாவாஎன்றங்கு  ஒல்லையேத்துவார்க்கு ஊனமொன்றி
ல்லையே    5-78-3


19.மூலம் 


கீளார் கோவணமுந் திருநீறு 

         மெய் பூசியுன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா    

          எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடி     

          உள் மாணிக்கமே
கேளா நின்னையல்லால் இனி
          யாரை நினைக்கேனே       7-24-2



 20.பூராடம் 

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
        நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோர்  அமுதமானாய்
        மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
         பூமிமேல் புகழ்தக்க பொருளேஉன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
        ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே 6-95-7



21.உத்திராடம் 



குறைவிலா நிறைவே குணக்குன்றே
         கூத்தனே குழைக்காதுடை யானே
உறவி லேன்உனை யன்றிமற் றடியேன்
         ஒருபிழைபொறுத்தால் இழிவுண்டே
சிறைவண் டார்பொழில் சூழ் திருவாரூர்ச்
         செம்பொனே திரு வாவடுதுறையுள்
அறவ னேஎனை அஞ்சல்என் றருளாய்
         ஆர்எ னக்குஉறவு அமரர்கள் ஏறே 7-70-6






                              திருச்சிற்றம்பலம் 



                        போற்றி ஓம் நமசிவாய

 



No comments:

Post a Comment