rudrateswarar

rudrateswarar

Tuesday, June 21, 2016

ஒன்றரைக் கண்ணன்

                                                         ஓம்நமசிவாய 

ஒன்றரைக் கண்ணன்

சிவபெருமானுக்கு மூன்று கண்கள் வலது கண் சூரியன் இடதுகண் சந்திரன்  நடுக்கண் நெற்றிக்கண் அது அக்கினி நெருப்புக்கண் .

இம்மூன்றில் வலப்பாகம் உள்ள வலக்கண் சிவனுக்குரியது இடக்கண் இடப்பாகம் உள்ள சக்திக்குரியது .நடுவில் உள்ள நெற்றிக்கண் இருவருக்கும் உரியது அதாவது ஆளுக்குப் பாதி இதையே அப்பர் பெருமானார் நகைச்சுவையாக கூறியுள்ளார் .நகைச்சுவை எனினும் தத்துவம் பொதிந்த பாடல் 
முருகப்பெருமான் சிவபெருமானின்  நெற்றிக்கண்ணினில் தோன்றியவர் சிவபெருமானுக்கு ஆறுமுகம் உண்டு ஐந்து முகம் நாம் அறிந்தது அதோமுகமாகிய கீழ்நோக்கிய முகம் ஞானிகட்கு மட்டுமே தெரியும் .எனவே ஆறுமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக்கண்களினின்று ஆறு தீப்பொறிகளாகத் தோன்றியவரே முருகப்பெருமான் .இந்த கருத்துள்ள பாடலில் தான் இறைவனை ஒன்றரைக்கண்ணன் என்று பாடியுள்ளார் 

                        திருச்சிற்றம்பலம்

இன்று அரைக்கண் உடையார் எங்கும் 
          இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள்

           பாவைக்குக் கூறு இட்ட நாள்
அன்று அரைக் கண்ணும் கொடுத்து 

            உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் 

          ஒற்றியூர் உறை உத்தமனே
                                                          தி .4 ப .86.பா 7


                          திருச்சிற்றம்பலம்

                       போற்றி ஓம்நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி  
 

No comments:

Post a Comment