rudrateswarar

rudrateswarar

Tuesday, June 21, 2016

திருவமர் திருவளர்

                                                            ஓம்நமசிவாய

திருவமர் திருவளர் 




திருஅமர் தாமரையும் திருவளர் தாமரையும் பொருள் ஒன்றே .சீர்வளர் செங்கழுநீரும் சீர்வளர்காவியும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமில்லை . அப்பர்சுவாமிகள் திருவிருத்தப் பாடலுக்கும் மணிவாசகப்பெருந்தகையின் கோவைப் பாடலுக்கும் சொல் மாற்றமின்றி பொருள் மாற்றமில்லை .திருக்கோவையில் தலைவிக்கு சொல்லப்படுகிறது . அப்பர்  உமையம்மையை பாடியுள்ளார் .இவ்விரு பாடல்களிலும் மிகுந்த  ஒற்றுமையைக்   காணலாம் . இதுவே திருமுறைகள் இறைவனின் திருவாக்கு என்பதற்கு ஒரு சான்று .

            திருச்சிற்றம்பலம் 



திருவமர் தாமரை சீர்வளர் செங்கழு நீர்கொணெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ் சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட மலிமறை யோர்கணல்லூர்
உருவமர் பாகத் துமையவள் பாகனை யுள்குதுமே
                                                                                                            தி. 4-ப. 97-பா. 10



திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக்
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்டோங்கு தெய்வ
மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந்
துருவளர் காமன்றன் வென்றிக்கொடிபோன் றொளிர்கின்றதே
                                           தி.8 திருக்கோவையார்  பா.1


               திருச்சிற்றம்பலம்

            போற்றி ஓம்நமசிவாய 

சிவனடிமைவேலுசாமி  

No comments:

Post a Comment