rudrateswarar

rudrateswarar

Tuesday, June 7, 2016

ஆளுடைய பிள்ளையார் ஆணையிட்டு அருளிய பதிகங்கள்

                   ஓம்நமசிவாய
ஆளுடைய பிள்ளையார் ஆணையிட்டு அருளிய பதிகங்கள்

  
காழிப்பிள்ளையார் பாடிய அனைத்துப்  பதிகங்களுமே அற்புதமானவையே மிகச் சிறந்த பலன் தரக்கூடியவை இம்மைக்கும் மறுமைக்கும் பெரும் பேறு நல்கும் வல்லமை மிக்கவை. அதிலும் சிறப்பாக இறைவனின் உரையே தனதுரையாக ஆணையாகப்பாடிய இந்த ஐந்து
பதிகங்களும் ”ஆணை நமதே” என்று முடிவதால் மிகவும் உயர்ந்தவை என்பதில் ஐயமில்லை.நாம் உய்வு பெறுவது உறுதி.
     
                        திருச்சிற்றம்பலம்

1. திருமுறை 2 பதிகம் 84 
 தலம் - திருநனிபள்ளி பண்-பியந்தைக்காந்தாரம்

கடல்வரை ஓதம்மல்கு கழிகானல் பானல்
              கமழ்காழி என்று கருதப்,
படுபொருள் ஆறும்நாலும் உளதுஆக வைத்த
             பதி ஆன ஞானமுனிவன்,
இடுபறை ஒன்றஅத்தர் பியல்மேல் இருந்துஇன்
             
இசையால் உரைத்த பனுவல்,
நடுஇருள் ஆடும்எந்தை நனிபள்ளி உள்க,
              
வினை கெடுதல் ஆணை நமதே     11

2. திருமுறை 2 பதிகம் 85 பொது கோளறுபதிகம் பண்-பியந்தைக்காந்தாரம்

தேன்அமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல்துன்னி,   
   
          வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து
             
மறைஞான ஞானமுனிவன்,
தான்உறு கோளும்நாளும் அடியாரை வந்து
             
நலியாத  வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலைஓதும் அடியார்கள், வானில்
             
அரசு ஆள்வர்; ஆணை நமதே  11

3. திருமுறை 3 பதிகம் 15 தலம் திருவெண்காடு பண்-காந்தாரபஞ்சமம்

நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன்,
செல்வன்எம் சிவன்உறை திருவெண் காட்டின்மேல்,
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே  11

4. திருமுறை 3 பதிகம் 78 
தலம் - திருவேதிகுடி பண்-சாதாரி

கந்தம்மலி தண்பொழில்நல் மாடம்மிடைகாழி
                       
வளர் ஞானம் உணர் சம்-
பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு,
                      வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள், நல்லவர்கள் என்னநிகழ்வு
                      
எய்திஇமையோர்
அந்த உலகு எய்தி அரசு ஆளும் அதுவே சரதம்;
                       ஆணை நமதே     11

5. திருமுறை 3 பதிகம் 118 
தலம் - திருக்கழுமலம் பண் -புறநீர்மை

கானல்அம் கழனி ஓதம்வந்து உலவும் கழுமல
                         
நகர்  உறைவார்மேல்
ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால்
                        
உரை செய்து நவில்வார்
ஊனசம்பந்தத்து உறுபிணி நீங்கி, உள்ளமும்
                        
ஒருவழிக்  கொண்டு
வான்இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்;
                       
மற்று இதற்கு ஆணையும் நமதே.      11


                          திருச்சிற்றம்பலம்

                       போற்றி ஓம்நமசிவாய

சிவனடிமைவேலுசாமி

No comments:

Post a Comment