rudrateswarar

rudrateswarar

Monday, June 6, 2016

பாலறாவாயர் பன்னிரு பெயர்த்துதி (துவாதச நாமார்ச்சனைத் தோத்திரம்)

                                                      ஓம்நமசிவாய

பாலறாவாயர் பன்னிரு பெயர்த்துதி
(துவாதச நாமார்ச்சனைத் தோத்திரம்)

01.திருஞான   சம்பந்த   தேவே     போற்றி
02.அருளுறு   சண்பை   ஆண்டகை போற்றி
03.விளங்கிய  பூந்தராய்  வேந்தே    போற்றி
04.களங்கமில் சண்பைக்  காவல     போற்றி
05.அரணுறு   சண்பை      அரசே   போற்றி
06.விரவிய   கொள்கை   மேலோய் போற்றி
07.பெம்மான் இவனெனும் பிள்ளை   போற்றி
08.ஓதாது   உண்மைகள் உணர்ந்தாய் போற்றி
09.மெய்மைசேர் வேத    வாயாய்    போற்றி
10.வெம்மைதீர் வெங்குரு  வேந்தே   போற்றி
11.உமையருள் ஞானம்   உண்டாய்   போற்றி
12.விமலமார் சண்பையர்  வேந்த     போற்றி
  எனும்முந் நான்காம் இத்திருப்  பெயர்த்துதி
  தனைமனம் ஒன்றி நாள்தொறும் சாற்றுவோர்
  இம்மையில் இன்பம் நன்கு எய்தி
  மெய்மை வீட்டின்பமும் மேவுவர்   திடமே.


அடியார் சீர் பரவும் திருத்தொண்டர் புராணத்திற்கு உலகுய்ய உரை செய்த 
பெருமானார்
சீர்வளர்சீர் சிவக்கவிமணி அய்யா அவர்களால் அருளப்பட்டது.  

             திருச்சிற்றம்பலம்

          போற்றி ஓம் நமசிவாய 

சிவனடிமை வேலுசாமி  

No comments:

Post a Comment