rudrateswarar

rudrateswarar

Thursday, March 28, 2013

ஆன்மீகம்

                                             ஓம் நமசிவாய 

 

ஆன்மீகம்

        
ஆன்மீகம் எனும் வார்த்தை இப்பொழுது மிகவும் அதிகமாக பயன்பாட்டில் உள்ள ஒரு வார்த்தை ஆன்மீகம் என்றால் கடவுளைப் பற்றி பேசுவது என்று எண்ணுகிறோம் கடவுளைப் பற்றி என்றால் கடவுளிகம் என்றோ கடவுளிசம் என்றோ தானே சொல்ல வேண்டும் கம்யூனிஸ்ட் பேசுவது கம்யூனிசம் மார்க்சிஸ்ட் பேசுவது மார்க்சிசம்


நாம் கடவுளைப்பற்றி பேசுவதை ஏன் ஆன்மீகம் என்கிறோம்? ஆன்மீக சொற்பொழிவு ஆன்மீக பத்திரிகை ஆன்மீக நிகழ்ச்சி என்று எல்லாமே ஆன்மீகம் தான் ஏன்? ஆன்மீகம் என்பது ஆன்மா (உயிர்) பற்றியது ஆன்மாவை மீட்டு எடுக்கும் ஒரு இயல் இகம் ஆன்மீகம் கடவுளைப் பற்றி பேசுவதற்கும் உயிர் எனும் ஆன்மாவிற்கும் என்ன சம்பந்தம் ? கடவுளை நாம் வணங்கு வதோ அல்லது வழிபடுவதோ இந்த ஆன்மா தான் செய்த கர்ம வினைகளை தீர்த்து உய்வு பெறவேண்டும் என்பதற்காகவே சொத்து வேண்டும் பணம் வேண்டும் கார் வேண்டும் பங்களா வேண்டும் இன்னும் பிற உலக சுகங்களுக்காக அல்ல.


ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ? ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே. பெயரை நீக்கி பிணம் என்று பேரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன?


ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும்


பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார் அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார் இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரமன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்


பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும். விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்


சூரசம்காரம் செய்யும் முன் தேவர்களுக்கு முருகப்பெருமான் திருசேய்ங்கலூரில் சிவ பூஜை செய்து காட்டினார் அவர் தேவ சேனாபதி அல்லவா ?தலைவர் அல்லவா? அவர் பூஜை செய்த பிறகு தேவர்களிடம் கேட்டார் உங்கள் கஷ்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா ? என்றார் நீங்கள் சிவபூஜை செய்ய மறந்ததால் என்றுகூறி சிவாம்சமான முருக பெருமான் சிவபூஜை செய்து காட்டினார் தலைவன் என்பவன் தான் காட்டிய வழியில் தானே நடந்து காட்ட வேண்டும் என்று தலைவனுக்கான இலக்கணத்தையும் உணர்த்தினார்


ஆதலால் ஆன்மீகம் என்பதாவது இறைவனை வணங்கி ஆன்மாவை உலகத் தளைகளில் இருந்து மீட்டு எடுக்கும் செயலாகும்


இன்று ஆன்மீக இயக்கங்கள் என்ன செய்கின்றன முன்னோர் வழி செல்லாமல் புது புது மந்திரம் கண்டு பிடிப்பது புது புது இறை மார்க்கங்களை புகுத்துவது என்று சுய நலநோக்கிலும் பணம் பண்ணும் நோக்கிலும் செல்கின்றன


மூல முதல்வன் மூல விக்கிரகமாக உள்ளே வீற்றிருக்க சிறு தேவர் வழிபாட்டை பிரதானமாக்கி இறைவனை இரண்டாம் நிலைக்கு கொண்டு வருவது மிகவும் வருத்தம் உதாரணம் திருநள்ளாறு. தர்பாரண்யேஸ்வரரை வணங்க விடாமல் இலவச தரிசன பக்தர்களை சனி தரிசனத்தோடு கோவில் நிர்வாகமே வெளியே அனுப்புகிறது சனைச்சரன் என்ற அவருக்கு ஈஸ்வர பட்டம் வேறு கொடுத்து சனீஸ்வரன் ஆக்கி விட்டார்கள்.மூல கருணா மூர்த்தி அவர் இருக்க சனி ,ராகு ,கேது இவர்கள் என்ன செய்ய முடியும் .இது கடவுளை நம்பாதவர்கள் செயல்,இவர்கள் போலிகளால் ஏமாற்றப்படுவார்கள் நம்பி செய்யும் எந்த காரியமும் வீண்போகாது அது இறை வழிபாட்டுக்கும் சேர்த்து தான்


சமீப காலமாக சிவமூர்த்தங்களில் ஒன்றான பைரவர் பூஜை போய் சொர்ண பைரவர் பூஜை பிரபலமாகி விட்டது அவருடைய மூல மந்திரம் என்று நூற்றுக்கணக்கில் ஜெபம் செய்யவேண்டுமாம் தினம் ஒரு திருமுறை படியுங்கள் அதில் உள்ள மந்திரசக்தி பலன் தெரியும் .சம்பந்தர் அப்பர் இவர்கள் சைவத்தின் இரு கண்கள் என்பார் சேக்கிழார். இவர்கள் வாக்கினை மதிக்காதவர்கள்
சைவர்களா ? இவர்களுக்கு சிவன் தெய்வமும் அல்ல.


ஆராய்ச்சி என்று இவர்களாக கிளப்பி விட
வேண்டியது ரொம்ப ஆழமா உள்ளே சென்று பெயரில் சொர்ணம் வைத்துள்ள இவரை வழிபட்டால் பணம் கொட்டும் என்று கவர்ச்சி விளம்பரம் வேறு. கேவலம் பணத்திற்காகவா ஆன்மீகம் .ஆன்மீகம் என்ற சொல்லின் அர்த்தமே அடிபட்டுவிட்டதே


ஆன்மீகம் புத்தக வடிவிலும் இணைய வடிவிலும்வியாபாரம்ஆகிவிட்டது

இன்னொருவேதனையானவிஷயம் பரிகாரம் பண்ணுவதற்கு கோவிலுக்கு செல்வார்கள் ஆனால் இறைவனை தொழவேண்டும்
நம்மை படைத்து நமக்கு இது காறும் வாழ்வு
கொடுத்தற்கு நன்றிகடன் செலுத்த செல்வ தில்லை ஒவ்வொரு காரியத்திலும் லாபம் நஷ்டம் பார்க்க கடவுள் என்ன கார்பரேட் கம்பெனி முதலாளியா?


கடவுள் கடந்தும் இருக்கிறார் உள்ளாகவும் இருக்கிறார்

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ என்பார் மாணிக்கவாசகர் நம் வினைக்கு ஏற்ப என்ன நமக்கு உண்டோ அதை தருவார் ,நம் கடன் (இறை)பணி செய்து இருப்பதே . அப்போ வேலை வெட்டிக்கு போகவேண்டிய தில்லையா ?பணி என்பதில் அதுவும் அடக்கம் இப்படி ஆளுக்கொரு காரணம் வைத்து கடவுள்களின் எண்ணிக்கையை பெருக்கி மாற்றார் நகைக்கும்படி செய்கிறார்கள்


இது எப்படி இருக்கிறது தெரியுமா? சைவமாக இருந்த மக்கள் அசைவம் சாப்பிட ஆசைப் பட்டு உக்கிரதெய்வங்களை உருவாக்கி ஆடு கோழி மாடு என்று பலியிட்டு தான் சாப்பிட, சாமி கோர உருவத்தோடு இருப்பதால் அவருக்கு அசைவம் படைக்கபடவேண்டும் அப்போது தான் அவர் சாந்தி பெற்று கேட்டதை கொடுப்பார் என்று ஒரு கிளை விதியை உருவாக்கி கொண்டார்கள்


ஒரு உயிரை பலி கேட்பவர் இறைவனாக இருக்க முடியாது இறைவன் உயிர்களை காபந்து பண்ணுகிறவர் . அவரவர் வினைக் கேற்ப பலன் முன்பின் இருக்கலாமே தவிர உயிர்களிடத்தில் பலி கேட்கும் அளவுக்கு கடவுள் ஒன்றும் கொடுமைக்காரன் அல்ல
                                       
                                          

                       போற்றி ஓம் நமசிவாய 
                                          


                                                    
                            திருச்சிற்றம்பலம் 

3 comments:

  1. கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    தவம் செய்ய வேண்டும்!!!

    தவம் செய்ய நாம் காட்டுக்கு போக வேண்டியதில்லை! குடும்பத்தை விட்டு ஓட வேண்டியதில்லை! காவி உடுத்து தாடி முடி வளர்த்து உருத்திராட்சம் அணிந்து உலகம் சுற்ற வேண்டியதில்லை! நமது உடலை வெறுத்து வருத்தாது துன்புருத்தாது இருக்க வேண்டும்! உணவை வெறுத்து இலை உணவாக வேண்டாம்! கடுமையான ஜப தாபங்கள் வேண்டாம்! சுருக்கமாக கூறுவதனால் ஒன்றும் செய்ய வேண்டாம்! சும்மா இருந்தாலே போதும்! திருமணம் ஞானம் பெற ஒரு தடையல்ல!

    தவம் எப்படி செய்ய வேண்டும்? தவம் என்றால் மந்திர ஜபமல்ல! தவம் என்றால் பூஜை செய்வதோ யாகம் வளர்ப்பதோ அல்ல! தவம் என்றால் பிராணாயாமமோ வாசி யோகமோ இன்னபிற யோகங்களோ அல்ல! தவம் என்றால் உடலை வருத்தி செய்யும் எந்த செயலுமல்ல! தவம் என்றால், நான் யார்? என அறிய உணர மெய்ஞ்ஞான சற்குருவிடம் ஞானதானம் பெற்று கேட்டதை உணர்ந்து அறிய சும்மா இருந்து செய்யும் பயிற்சியே! முயற்சியே!

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
    இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete
  2. சமய குரவர் நால்வரை விடவும் 63வரை விட மேலானவராக திரு .இராமலிங்கம் அவர்களை சைவ சமயம் இது வரை ஏற்று கொள்ளவில்லை . அவரை அவர் காலத்து ஆதீனங்கள் யாரும் ஏற்கவில்லை ஆறுமுக நாவலர் அவர்களை இம்சித்தது ஜீவ காருண்யமா .இவர் எழுதியதை இவரே திருமுறை என்று கூறி கொண்டது செத்தவரை எழுப்புவதாக கூறியது எல்லாம் இவரை ஞானியாக பரிணமிக்கவில்லை .மேலும் இவர் ஜோதியில் கலந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை . அவருடைய காணாமல் போனது பற்றிய கலெக்டர் ரிப்போர்ட் அவர் காணாமல் போய் விட்டார் என்றே சொல்கிறது .இவர் சொன்ன சன்மார்க்கம் ஒருகலவை புத்த சமண இஸ்லாமிய கிறித்துவ சைவ கலவை
    இதனால் தாங்கள் சொல்ல வருவது என்ன ? முதல்ல நீங்க தெளிவா இருங்க சரியா ? வழவழன்னு என்னமோ சொல்றீகன்னு தெரியுது அது தான் என்னன்னு புரியல குருவும் அப்படியா ?

    ReplyDelete