rudrateswarar

rudrateswarar

வெள்ளி, 29 மார்ச், 2013

அப்பர் பெருமான் காமெடி பாத்திரமா ?

                                                      ஓம் நமசிவாய            



அப்பர் பெருமான் காமெடி பாத்திரமா ?

திருவருட்செல்வர் என்ற திரைப்படத்தில் அப்பர் சுவாமிகள் வேடத்தில்  சிவாஜி கணேசன் அவர்கள் வாழ்ந்திருப்பார் அந்த  வேடம் எப்படி காமெடி வேடமாகும் நகைச்சுவை என்பது சிரிக்க வைக்கும்  படியாகவும் சிந்திக்க வைக்கும் படியாகவும் 
இருக்க வேண்டும் கோடானுகோடி மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும்  மகா மட்ட மான கேவலப்பிழைப்பாக இருக்க கூடாது.   அப்பர் சுவாமிகள் எவ்வளவு உயர்ந்தவர் எவ்வளவு அடிமைத்தனத்தோடு சிவத் தொண்டு ஆற்றியவர் .சைவர்களின் குருவான அவரை நக்கல் நையாண்டி செய்ய எப்படி துணிவு வந்தது இந்த நடிகனுக்கு அவர் பெருமையை அறியாத சிறு மதி படைத்த ஜென்மம் விவேக் .ஆட்டைக் கடித்து  மாட்டைக் கடித்து விவேக் இன்று கில்லாடி என்ற படம் மூலம் சைவர்களை கடிக்க வந்திருக்கிறார் உடனடியாக  அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் இல்லை யேல் படம் தடை செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதைச்செய்ய அடியார்கள் திருக்கூட்டம் தயங்காது. செய்யும் கண்டனம் ஓங்கி ஒலிக்கட்டும் . சைவ நெறி பரவட்டும் 


செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே



                                                          
                                                                சிவஞான போதம் 12ஆம் சூத்திரம்

சிவவேடத்தையே  சிவன் என்றும் ஆலயம் என்றும்  பாவிக்கவேண்டும் மேற்சொன்ன சிவஞானபோத 12ஆம் சூத்திரத்தில் உள்ள சாராம்சம்.

சைவம் அநாதி சிவன் அநாதி கேட்க ஆளில்லை  மத உணர்வை  கொச்சைப் படுத்தி  எடுத்த இந்த படம் படுதோல்வியை சந்திக்கும் இது சிவன் மேல் ஆணை 



                                      போற்றி ஓம் நமசிவாய 


                              திருச்சிற்றம்பலம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக