rudrateswarar

rudrateswarar

Wednesday, March 27, 2013

தினத்தந்திக்கு ஒரு கண்டனம்

                                                        ஓம் நமசிவாய



தினத்தந்திக்கு ஒரு கண்டனம்

 

அருள் தரும் ஆன்மீகம் என்ற இணைப்பு   புத்தகத்தில் (26-03-2013) தவறான தகவலை  அளித்துள்ளார்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இந்த பதிவு

 

1.  சந்திரனுக்கு இரண்டு தலங்கள் 

கடைசிப்பக்கத்தில் திருநாவுக்கரசரும்  
அப்பூதியடிகளும் திங்களூரை சொந்த  ஊராக  கொண்டவர்கள் என்று உள்ளது 
அப்பூதியடிகள் அவர்கள் திங்களூரை  சேர்ந்தவர் என்பதில் தவறில்லை ஆனால் திருநாவுக்கரசு சுவாமிகள் திருஅவதாரம்  செய்தது திருமுனைப்பாடி நாட்டில்
திருவாமூர்  தற்போதைய கடலூர் மாவட்டத்தில் உள்ளது 
 
அடியேன் இதை  சுட்டிக்காட்டுவதன் நோக்கம் அவர்களின்  பத்திரிகையை  இகழ்வதோ குற்றம் கூறுவதோ  அல்ல. 
ஆனால் சைவ சமய தகவல்கள் புராணங்கள் 
தவறில்லாமல் வெளியிட வேண்டும்  
என்பதற்காகவே.ஏனெனில்  சைவம்  எமது  வாழ்வியல் நெறி . 

ஏற்கெனவே இது போன்ற தவறு கண்டு
அடியேன் தினத்தந்தியின்  சென்னை  அலுவலகத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் செய்துள்ளேன்    
 
இனி இது போல் வராது என்று உறுதியளித் தார்கள்.வரும்  பிரசுரங்களை  தணிக்கை  செய்யாமல்வெளியிடுகிறார்கள். எம்போல  சிவனடியார்கள் மனம்  இதனால்  வேதனைப் படுகிறது. சிவன் அநாதி சைவம் அநாதி 
அதற்காக கேட்பாரில்லையா?வேற்று  மதத்தில் இப்படி உண்மைக்கு மாறான 
தவறுகளை ஏற்றுக்கொள்வார்களா?   அதற்கு கண்டனமே இந்த பதிவு மக்களை ஆன்மீகத்தின்பால் திருப்புவது  பெரும் பாடாகிறது இதில்  கருத்துக்குழப்பம் வந்தால் எப்படி இருக்கும்  இதில் தவறான  தகவல்  அறிந்தால் யார் சொல்வது உண்மை  அவ்வளவு பெரிய பத்திரிகையில் தவறாக  வெளியிடுவார்களா? என்ற சந்தேகம் கொள்ள வாய்ப்பாகும்.  இனி வரும் காலத்தில் இது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக்  கொள்ள வேண்டும் என்று 
வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் 
 
                                   

                   போற்றி ஓம் நமசிவாய 
 
                                 
                          திருசிற்றம்பலம்         

1 comment:

  1. . இனி
    வரும் காலத்தில் இது போன்ற பிழைகள்
    வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று
    வேண்டிவிரும்பி கேட்டுகொள்கிறோம்

    போற்றி ஓம் நமசிவாய

    திருசிற்றம்பலம்

    ReplyDelete