rudrateswarar

rudrateswarar

Wednesday, March 27, 2013

தினமலர் நாளிதழுக்கு கண்டனம்

                                                         ஓம் நமசிவாய

 

தினமலர் நாளிதழுக்கு கண்டனம்  

தினமலர் நாளிதழ் தங்களின்  இணைய தளத்தில் உள்ள ஆன்மீக வகுப்பறை என்ற தலைப்பில் நாயன்மார் குருபூஜை என்பது என்ன? தலைப்பில்  நாயன்மார்  குருபூஜை என்பது  அவர்களின்  ஜென்ம நட்சத்திரத்தில் அதாவது அவர்களின் அவதார தினத்தில்  என்று   வெளியிட்டிருக்கிறார்கள் 
அது தவறான தகவல்  குரு  பூஜை என்பது நாயன்மார்களின் முக்தி தினம் என்பதே சரி



நாயன்மார் குருபூஜை என்பது என்ன?
டிசம்பர் 06,2012
சிவனை முழுமுதற்கடவுளாக வழிபட்ட 63 அருளாளர்களை நாயன்மார் என்பர். இவர்களின் ஜென்மநட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் குருபூஜை நடத்துவர். பகலில் அபிஷேக ஆராதனையும், இரவில் புறப்பாடும் நடக்கும். இப்போது பல கோயில் களில் நாயன்மார் குருபூஜையே இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.


அடியேன் இதை சுட்டிக்காட்டுவதன் நோக்கம் அவர்களின் பத்திரிகையை இகழ்வதோ  குற்றம் கூறுவதோ  அல்ல ஆனால் சைவ சமய தகவல்கள் புராணங்கள் தவறில்லாமல் வெளியிடவேண்டும் என்பதற்காகவே. ஏனெனில் சைவம் எமது வாழ்வியல் நெறி .  எம்போல சிவனடியார்கள் மனம் இதனால் வேதனைப்படுகிறது சிவன் அநாதி சைவம் அநாதி அதற்காக கேட்பாரில்லையா? வேற்று மதத்தில் இப்படி உண்மைக்கு மாறான தவறுகளை ஏற்று கொள்வார்களா? அதற்கு கண்டனமே இந்த பதிவு .மக்களை ஆன்மீகத்தின் பால் திருப்புவது பெரும் பாடாகிறது இதில் கருத்துக்குழப்பம் வந்தால் எப்படி இருக்கும்  இதில் தவறான தகவல் அறிந்தால் யார் சொல்வது உண்மை அவ்வளவு பெரிய பத்திரிகை பொய் சொல்லுமா? என்ற சந்தேகம் கொள்ள வாய்ப்பாகும். இனி வரும் காலத்தில் இது போன்ற பிழைகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம் 

                                 

                                      போற்றி ஓம் நமசிவாய
                                           

                                 திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment