rudrateswarar

rudrateswarar

Saturday, March 2, 2013

சிவ தீக்ஷை

                                                      ஓம் நமசிவாய

சிவ  தீக்ஷை
தீக்ஷை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து  சிவஞானத்தை கொடுப்பது என்று பொருள் தமிழில் தீக்கை. உடலுக்கு பலசடங்குகள் செய்யப்படுகின்றன  அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீக்ஷை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க நிலப்பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவ சம்பந்தம் எனும் ஆரம்ப படி நிலையை உறுதிபடுத்தி கொள்ள இம்மை மறுமை இன்பங்கள் அடைய சிவபெருமான் திருவருள் பெற உரிமம் (தீக்ஷை) தேவை .
 
எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இரு பாலரும் தீக்ஷை  பெறலாம். தீக்ஷை  பெறாமல் சிவத்தை வழிபடுபவர் பொதுச்சைவர் எனப்படுவர் அவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து  திரிபுண்டரமாக  பூச முடியாது . நமசிவாய எனும் மிக உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நெறி . எனவே குரு மூலம் தீக்ஷை பெற வேண்டும் .நமது சமயக் குரவர்களும் சந்தான குரவர்களும் நமக்கு அருளியது அதுவே .
அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் . 
ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உபமன்யு  முனிவரும் தீக்ஷை  செய்து வைத்துள்ளார்கள் .
   
ஏன் தீக்ஷை  பெற வேண்டும் :
 1.  சிவ பெருமானை ஆகமங்களில்  விதித்தபடி  வழிபாடு செய்வதற்கு உரிய  அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக  திருநீறு அணிந்து பூசை செய்யலாம் . 
2. தீக்ஷை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
 3.சமய தீக்ஷை பெற்றாலே அவர்களை  எமன் அணுக மாட்டான் அதனால் நரகம் இல்லை அவ்வுயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீக்ஷை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார் 
5.நிர்வாண தீக்ஷை பெற்றால் சதாசிவ மூர்த்தி  வாங்குவார் .
6.எமன் வாங்காததால் நரக துன்பம்  ஆவி உலக துன்பங்கள் நம்மை அணுகாது .
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை 
8.இறைவன் தீக்ஷா கிரியையின் மூலம் மட்டுமே பாவ மன்னிப்பு அருளுகிறார் 
9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது 
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது .மாரடைப்பு நெருங்காது .
11.சிவோகம் பாவனை  மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறிகளும் நமக்கு குற்றேவல் புரியும் .அப்பர் பெருமான் அதை  பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம்.பாவனை உயிரை தூய்மைப்படுத்தும் 
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
13. 64 முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி  செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
14. தீக்ஷை பெற்று  ஆன்மார்த்த பூஜை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும்  (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம்  ). ஆகாமியம் ஏறாது 
  

                            போற்றி ஓம் நமசிவாய .


                            திருச்சிற்றம்பலம் 

5 comments:

  1. These people are christian sivan adiyaars.. Paava manippu undaa?

    ReplyDelete
    Replies
    1. யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
      மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
      வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
      ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே.



      இப்பாடல் சிவஞான சித்தியார் எனும் சாத்திர நூற்பா .இப்பாடலின் பொருள் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அத்தெய்வமாக

      அங்கே சிவபெருமான் தான் அருளுவார் ஏனெனில் மற்ற தெய்வங்கள் என்று நீங்கள் சொல்லும் எல்லாமே கருவில் உதித்து இவ்வுலக பிறப்பு இறப்பாகிய வினை அனுபவித்து மரணம் சம்பவித்தவை .கடவுள் அழியாதவர் .ஒரு கருவில் தோன்றி அழியும் ஒருவர் எப்படி கடவுளாகமுடியும் ? நீங்கள் எம்மத கடவுளை வணங்கினாலும் நீங்கள் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப

      அருளுபவர் சிவபெருமான் ஒருவரே அவர் ஒருவரே தோற்றமும் முடிவும் இல்லாதவர் .இந்த உடல் அழியும் ஆனால் உயிர் அழிவில்லாதது .எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிறவிகள் தோறும் பிறந்து அந்த ஆன்மா பக்குவப்பட்டு சைவ சமயம் சார்ந்து தான் பிறப்பில்லா முக்தி அடைய முடியும் .அதனால் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் போய்விடும் என்றால் டீ சாப்பிடுவது போல களவும் கொலையும் கற்பழிப்பும் இன்னபிற தவறுகளும் மலிந்துவிடும் .பாவமன்னிப்பு என்ற லாஜிக்கே தவறு செய்த பாவத்தை நாம் அனுபவித்தே தீர்க்க முடியும் வேறு புற வாசல் வழியாக தீர்ப்போம் என்றால் அது அண்டப்புளுகு தான்

      Delete
  2. யார் வேண்டுமானாலும் சிவதீட்சை பெறலாமா ? தீட்சை பெற்ற பிறகு என்ன எல்லாம் பின்பற்ற வேண்டும் ?

    ReplyDelete
  3. சிவதீட்சை யார் வேண்டுமானாலும் பெறலாமா ? தீட்சை பெற்றவர் பின்பற்ற வேண்டியவை என்ன என்ன என்பதனை கூறுங்கள் ?

    ReplyDelete