rudrateswarar

rudrateswarar

புதன், 20 மார்ச், 2013

போற்றி ஓம் நமசிவாய

                                                     ஓம் நமசிவாய 



 போற்றி ஓம் நமசிவாய 
                

ஐந்தெழுத்து  எனும் அற்புத மந்திரம் இப்பிறவிக்கு வேண்டியன எல்லாம் தரும்.  வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டமுழுதும் தருவோய் நீ  எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கிற்கு இணங்க நமக்கு வேண்டியது அனைத்தும் அருள்பவர் பெருங்கருணை வடிவான 
எம்பெருமான் சிவபரம்பொருளே 
        
அப்படிப்பட்ட மூலப்பரம்பொருளின் மூல மந்திரம்  முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த 
ஸ்ரீகண்ட பரமேஸ்வரனைஅதிதெய்வமாக கொண்ட மிக எளிமையான நமசிவாய மந்திரம் அதற்கு மேல் மந்திரம் வேறில்லை 
  
அம்மந்திரத்தை தினம்108முறை  ஜெபிக்கவோ அல்லது 
நோட்டு புத்தகத்தில்எழுதியோ செய்யலாம்நேரம் 
வாய்த்தால் காலை மாலை என  இரு  வேலையும் ஜெபிக்கலாம் இல்லையென்றால்  மாலை 4.30முதல் 7.30வரை 
நித்ய பிரதோஷ காலத்தில்கண்டிப்பாக செய்யவேண்டும்  
நேரம்இல்லை என்று சாக்கு தேவையில்லை 
அதிபட்சம் 6 நிமிடம் ஆகலாம் தவிர பட்ச பிரதோஷம் வரும் திரயோதசி அன்று சிவாலயம் 
சென்று  பூஜையில்கலந்து கொண்டு  ஐந்தெழுத்தை  அங்கு  ஜெபிக்கவோ  எழுதவோ செய்யலாம் இதன்  இம்மை  நன்மைகள் கண்கூடாக  தெரியும்
    இதைப் படிக்கும் அன்பர்கள் தயவு கூர்ந்து சிலபேருக்காவது இம்மகிமையை  எடுத்துசொல்லி அவர்களை 
நல்வழிபடுத்துங்கள் 
    கஷ்டங்களுக்காக மதம் மாறி அங்கு சென்று பிரார்த்தனை செய்கிறார்கள் 
ஆனால்நம் சமயத்திலே ஜெபம்,வழிபாடு செய்வதில்லை 
ஏனெனில் முறையாக வழிகாட்டுதல்  இல்லாமையும் போலிகளுமே காரணம்  இதற்கு நீங்கள் எந்த கட்டணமோ பெரிய பூஜையோ காணிக்கையோ பரிகாரமோ  மந்திர தந்திரமோ அஞ்சன மையோ  எதுவும் தேவையில்லாமலே சகல பிரச்சினைகளிலும் இருந்து மீளலாம்  நமக்குள்ளேயே கடவுள் இருக்கிறார் இல்லையென்றால் இரவு தூங்கி காலைகண் விழிப்போமா 
நம் ஜீவனே சிவனாகும்
   
இந்த ஆன்மீக விழிப்புணர்வு நம்மால் சில 
பேருக்காவது வந்து நல்  வழி  காட்ட திருவருள்கூடி உள்ளதால் அடியேன் அதற்காக படிவம் 
அச்சடித்து கடந்த ஒருவருட  காலமாக  வழங்கி வருகிறோம் அதனால் பயன் பெற்றோர் ஏராளம்  எனவே இச்சேவையை 
பயன்படுத்தி பயன்பெறுங்கள்  உங்கள் ஊரிலும் இச்சேவைபெற அழையுங்கள் 
இப்படிவம் பெறுபவர்கள் தயவு செய்து அதை வேறுஉபயோகத்திற்கு (விபூதிமடிக்க)பயன்படுத்தாமல் சரியான நோக்கத்திற்கு பயன்படுத்தி சிவனருள் பெற வேண்டுகிறோம் 
                                                   
                                                        
                                       போற்றி ஓம் நமசிவாய 
                                               திருச்சிற்றம்பலம் 

2 கருத்துகள்: