rudrateswarar

rudrateswarar

Tuesday, June 25, 2013

திருமுறைகளின் மகிமை

                                                     ஓம் நமசிவாய


திருமுறைகளின் மகிமை

புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே 
         புத்த னார்தலை தத்தெனத் தத்துமே
கனலில் ஏடிடப் பச்சென்று இருக்குமே
        கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில்ஆண்பனை பெண்பனைஆக்குமே   
         பழைய என்புபொற் பாவைய தாக்குமே
சிவன ராவிடம் தீரெனத் தீருமே
         செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே. 



தலைகொள் நஞ்சமு தாக விளையுமே     
       தழல்கொள் நீறு தடாகம தாகுமே   
 கொலைசெய் ஆனைகுனிந்து பணியுமே 
       கோளராவின் கொடுவிடம் தீருமே  
 கலைகொள் வேதவனப்பதி தன்னிலே 
       கதவு தானும் கடுகத் திறக்குமே
அலைகொள் வாரியிற் கல்லும் மிதக்குமே    
       அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே. 



வெங் கராவுண்ட பிள்ளையை நல்குமே  
        வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே மங்கைபாகனைத் தூது நடத்துமே 
         மருவி யாறு வழிவிட்டு நிற்குமே 
செங்க லாவது தங்கம தாக்குமே 
       திகழும் ஆற்றிட்டுச்செம்பொன் எடுக்குமே   
 துங்கவான் பரிசேரற்கு நல்குமே 
        துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே. 



பெருகும் வைகை தனையடைப் பிக்குமே   
          பிரம்ப டிக்கும் பிரான்மேனி கன்றுமே 
நரியெ லாம்பரி யாக நடத்துமே 
          நாடி மூகை தனைப்பேசு விக்குமே 
பரிவிற் பிட்டுக்கு மண்சுமப் பிக்குமே
          பரமன் ஏடெழுதக் கோவை பாடுமே 
வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே 
          வாத வூரர் வழங்கிய பாடலே.



                             போற்றி ஓம் நமசிவாய


                                   திருச்சிற்றம்பலம்   

No comments:

Post a Comment