rudrateswarar

rudrateswarar

Tuesday, April 30, 2013

திருநாவுக்கரசு நாயனார் புராணம் -2

                                ஓம் நமசிவாய

திருநாவுக்கரசுநாயனார் புராணம்-2

நீற்றறையிலிடுதல்
பல்லவன் பாயுடுத்த பாவிகளைபார்த்து அவனை என் செய்வோம் சொல்லும் என்றான் 
அறம் துறந்த அவர்கள் நீற்றறையில் இடுமாறு கூறினார் அவ்வண்ணம் மன்னனின்
ஆணைப்படி நீற்றறையின் உள்ளே ஆளுடைய அரசை உள்ளே வைத்து காவல் புரிந்தனர் . அவரோ அம்பலத்தில் ஆடும் திருவடி நிழலை
தலைமேல் கொண்டு ஈசனடியார்க்கு இடர் 
உளதோ?என்று கருணைக்கடலாகிய  கண்ணுதற் கடவுளையே தொழுதிருந்தார், அதனால் அந்த நீற்றறை இளவேனில் பருவத்தில் தென்றல் வீச, தடாகத்தின் குளிர்ச்சி, யாழின் கானம் போல குளிர்ந்தது
அப்போது அடிகள் அருளிய பதிகம் 

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

ஏழு நாட்கள் கழித்து நீற்றறையை திறந்து 
ஊனமின்றி இருந்த திருநாவுக்கரசை பார்த்து
அதிசயித்தனர் 

நஞ்சூட்டுதல்  
அரசன்பால் அணுகி இவன் நமது சமயத்தில் 
இருந்தபோது அறிந்துகொண்ட சாதகத்தால் 
உயிர்தப்பினான்.எனவேவிடம்ஊட்டிகொல்ல
வேண்டும் என்றனர் அரசன் அனுமதி தந்தான் 
பாவிகள் நஞ்சு கலந்த பாலன்னத்தை உண்ண
கொடுத்தார்கள் ஆலமுண்ட நீலகண்டப் பெருமானுடைய அடியார்களுக்கு விடம் அமுதாவதில் என்ன ஆச்சரியம்?

மதயானையை ஏவுதல் 

நஞ்சு அமுதமானதை கண்ட அமணர்கள் அஞ்சி இவன் பிழைத்தால் நமக்கெல்லாம் 
இறுதியே என்று கருதி அரசனிடம் சென்று 
நம் சமயத்தில் கற்றுக்கொண்ட விடந்தீர்க்கும் மந்திரத்தினால்தப்பித்துகொண்டான் அவனை
மதமேறிய யானையை விட்டுக்கொல்வோம்
என்றார்கள் .மன்னனும் அனுமதிக்க கூற்று வனைப்போல யானை சென்றது அதனை திருநாவுக்கரசரை நோக்கி சமணர்கள் செலுத்தினார்கள்.அதுகண்ட அடிகள் ஆனையுரித்த அன்னலை நினைத்து 

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.

பாட அந்த மதயானை யாவரும் காண அவரை 
வலம் வந்து வீழ்ந்து வணங்கியது அதுகண்ட 
சமணர்கள் மீண்டும் அவர்மீது ஏவ அது பாகன்களை கொன்று சமணர்களை தாக்கியது 

கடலிடை விடுத்தல்  
மன்னனிடம் சென்று நமது சமயத்தில் கற்றுக் கொண்ட முட்டி நிலையினால் நாம் ஏவிய 
யானயைக்கொண்டே நமது கீர்த்தியை அழித்து விட்டான் இனி கல்லில் கட்டி கடலில் வீழ்த்துதல் வேண்டும் என்றனர் மதிகெட்ட 
மன்னனும் அதற்கிசைந்தான் ஏவலரும் அவ்வாறே கல்லைக்கட்டி கொண்டுபோய் கடலில் விட்டு வந்தார்கள் .அடிகளோ என்ன 
செய்தாலும் எந்தையை ஏத்துவேன் என்று 
நமசிவாயப்பதிகம் பாடினார் 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

அந்தப்பெருங்கல்லே தெப்பமாக அதன் மீது 
வீற்றிருந்தருளினார் பிறவிப்பெருங்கடலை 
கடக்கவைக்கும் ஐந்தெழுத்து இந்த ஒரு கடலைக்கடக்கவைப்பதில்ஆச்சர்யம்இல்லை
வருணன் வாகீசரை திருப்பாதிரிபுலியூரில் 
கரைசேர்த்தான் அங்குள்ள அடியார்கள் அவரை போற்றி ஹரஹர என்று முழக்கம் இட்டார்கள் 

பல்லவன் சரணாகுதல் 
சமணர் கூற்று பொய் என்று பழவினை பாசம் முறிய சைவசமயம் சார திருநாவுக்கரசு சுவாமிகளை தொழுது நின்றான் சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துக் கொணர்ந்து குணபரவீச்சரம் என்ற திருக்கோவிலை கட்டினான் 

இலச்சினை பெறுதல் 
 மனம் வாக்கு காயம் என்று முக்கரணங்களாலும் இறைவனை வழிபட்டு வந்தாலும் அவருக்கு சமண சமயத்தில் தொடக்கத்தில் இருந்த உடலுடன் வாழ விருப்பம் இல்லை தூங்கானைமாடம் எனும் திருக்கோவிலில் இறைவனிடம் இந்த உடலுடன் உயிர் வாழமாட்டேன் வாழ்வதானால் இலச்சினை இட்டு அருளுவீர் என்று வேண்டி பொன்னார் திருவடிக் கொன்றுண்டு எனத்தொடங்கும் செந்தமிழ் பதிகம் பாடினார் பரம கருணாநிதியாகிய எம்பெருமான் திருவருளினால் ஒரு சிவபூதம் யாரும் அறியாவண்ணம் திருநாவுக்கரச ருடைய திருத்தோள்களில் சூல முத்திரையும் இடப முத்திரையும் இட்டு அகன்றது

திருஞானசம்பந்தர் சந்திப்பு 
சீர்காழியில் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டதையும் உண்டவுடன் இவன் எம்மான் என்று வண்டமிழ்ப் பாமாலை பாடியதும் அடியார்கூற அவரைக்காணும் ஆவல் பெருகி சீர்காழி புறப்பட்டார் அவர் வருகை அறிந்து எதிர் கொண்டு அழைக்க வந்த சம்பந்தரைப் பணிந்தார் பிள்ளையாரும் பணிந்த அவர்கரம் பற்றி தாமும் பணிந்து அப்பரே என்று அழைத்தார்.அரசு அடியேன் என்றார் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.ஏழும் 
எழுபதும் சந்தித்துக்கொண்டது அறிய காட்சி 

திருவடி தீட்சை 
 பட்டீச்சரம் அருகில் உமாதேவியார் பூசித்த 
திருசத்திமுற்றம் மேவிய சிவனை உள்ளங்குழைந்து எம்பெருமானே கூற்றுவன் என் உயிரைப்பற்றுமுன் உமது அழகிய அடிமலரை அடியேன் தலைமேல் வைத்தருள வேண்டும் என்று விண்ணப்பஞ்செய்து பாட 
நல்லூருக்கு வா என்று பணித்தருளினார் 
திருநல்லூர் சென்று மனமுருகி வணங்கினார் சிவபெருமான் உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம் என்று சென்னியின் மேல் பாதமலர் சூட்டியருளினார் .தரித்திரர்க்கு தனம் கிடைத்தாற் போல திருவருளை நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து திருப்பதிகம் பாடினார் 


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
             நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
            செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
            இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல் வைத்தார்
             நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.
                                              

                                                             தொடர்ச்சி 3இல் 


                        போற்றி ஓம் நமசிவாய 


                            திருச்சிற்றம்பலம் 
         

No comments:

Post a Comment