rudrateswarar

rudrateswarar

Tuesday, April 2, 2013

மனிதப் பிறப்பின் பயன்

                                                      ஓம் நமசிவாய


மனிதப் பிறப்பின் பயன்


1.தலை

தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.                    

2.கண் 
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன் றன்னை
எண்டோள் வீசிநின்றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.

3.செவி                 
செவிகாள் கேண்மின்களோ -சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதுஞ் 
செவிகாள் கேண்மின்களோ.              

4.மூக்கு 
மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.                      

5.வாய்  
வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.                 

6.நெஞ்சு  
நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.                 

7.கை  
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழீர்.               

8.உடல்  
ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.                    

9.கால்  
கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.                  

10.உயிர்  
உற்றா ராருளரோ - வுயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றா ராருளரோ.                       

11.சிந்தனை  
இறுமாந் திருப்பன்கொலோ -ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு
இறுமாந் திருப்பன்கொலோ.          

12.மெய்யறிவு  
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்

நான்காம் திருமுறையில் 9 ஆம் பதிகம் திரு அங்கமாலை அப்பர் சுவாமிகளால் அருளப் பெற்றது 

தலை,கண்,காது,மூக்கு,வாய்,நெஞ்சம்,கை,
மெய்,கால்,உயிர்,அறிவு,நினைவு என அனைத்தும் அரனாரைத் தொழவே  என்று திருப்பதிகம் கூறுகின்றது

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் 
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே 
வீழ்த்த வாவினையேன் நெடுங்காலமே 

என்று 5ஆம் திருமுறை 90வது திருப்பதிகம் 
மாசில் வீணையும் எனத்தொடங்கும் பதிகத்தில் 7 வது பாடலில் நாம் இறைவனுக்கு மனிதப்பிறவி அளித்தமைக்கு நம் அங்க உறுப்புகளை எப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக பயனாக்க வேண்டும் என்று அப்பர் சுவாமிகள் பணித்துள்ளார் 


                 

                  போற்றி ஓம் நமசிவாய

                   

                       திருச்சிற்றம்பலம்                  




No comments:

Post a Comment