rudrateswarar

rudrateswarar

Monday, April 29, 2013

அர்ச்சுனனே கண்ணப்பர்

                                       ஓம் நமசிவாய


அர்ச்சுனனே  கண்ணப்பர்

கண்ணப்பரின் முற்பிறப்பு அர்ச்சுனர் .அர்ச்சுனர் பெரிய சிவனடியார் சிவத்தல யாத்திரை புரிந்ததும் சிவபெருமானைக் குறித்து மாதவம் புரிந்ததும் இதற்கு சான்று
பதிமூன்றாம் நாள் போரில் அபிமன்யு இறந்த இரவு மகன் மாண்ட காரணமாக வருந்தி சயத்திரதனை கொள்ள சபதம் செய்து கண்ணனுடன் கயிலை போகத்துணிந்து செல்லும்போது சிவபூசை  செய்யாமல் உணவு உட்கொள்ளேன் என்றதும் இதற்கு சான்றுகளாகும் 

பாசுபதம் வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் செய்தார் அர்ச்சுனர் 
அப்போது ஒரு பன்றியின் காரணமாக இருவருக்கும் சண்டை மூண்டது   அப்போது சிவபெருமானை  வேடன் என்று இகழ்ச்சியாக அர்ச்சுனர் ஏசுகிறார் 
அப்போது போரை நிறைவுறச் செய்ய சிவபெருமான் திருவுருக்காட்டி அருளி என்ன வரம் வேண்டும் 
என்று கேட்கிறார் அப்போது பாசுபதம் வேண்டித் தவம் செய்தாராகிலும் இறைவரை நேரில் கண்டதும் போருக்குரிய கணையை வேண்டாமல் 
இடையறாத இன்பஅன்பைத் தருமாறு வேண்டினார்.
பரமேஸ்வரன் தனஞ்செயனெ நீ முதலில் 
விரும்பிய பாசுபதத்தை இப்போது பெற்றுக்கொள் ,
இப்போது விரும்பிய அன்பையும் அதனால் வரும்  முக்தியையும் மறுபிறப்பில் பெறுவாய், நம்மை  வேடன் என்று குலங்குறித்து இகழ்ந்தமையினால் நீ 
வேடனாகப்பிறப்பாய் இன்று பன்றி காரணமாக போர் நடந்தது அன்று பன்றி காரணமாக நீ வந்து  காளத்தியில் எம்மைகண்டு அருள்பெறுவாய் என்று 
நல்வரம் நல்கி அருள் புரிந்தார்

மேற்சொன்னபுராணத்தை காளத்தி புராணம் கூறுகிறது 
அதுமட்டுமல்ல நக்கீர தேவர் தனது கயிலை பாதி  காளத்தி பாதி அந்தாதியில் பாடியருளியுள்ளார்  கல்லாடதேவ நாயனாரும் கண்ணப்பரைப் பற்றி
பாடியுள்ளார் இவ்விரண்டும் பதினோராம் திருமுறையில் இடம் 
பெற்றுள்ளன மேலும் நக்கீரதேவர் திருக்கண்ணப்பதேவ மறம் என்றே தனி நூலே 
பாடியிருக்கின்றார் 


                              போற்றி ஓம் நமசிவாய 


                                    திருச்சிற்றம்பலம்
        

 

No comments:

Post a Comment