rudrateswarar

rudrateswarar

Sunday, April 7, 2013

காலம் ஒரு கணக்கு

                                     ஓம் நமசிவாய

 
 
காலம் ஒரு கணக்கு  

ஒரு நாழிகை -24 நிமிடம் 
21/2 நாழிகை   -1 மணி 
60 நாழிகை      - 1 நாள் 
360 நாள்             -1 சாந்திர வருடம் 
365நாள் 15 நாழிகை 31 நொடி -1 சௌர வருடம் 
360 சௌர வருடம் -1 தேவ வருடம் 
1வருடம்    -21600 நாழிகைகள் 

தில்லை பொன்னம்பல ஓடுகள்- 21600

அதில் உள்ள ஆணிகள்  -72000 (நமது நாடிகளின்  எண்ணிக்கை )

360 மானுட வருடம் -1 தேவ வருடம் 
4800 தேவ வருடம் -கிருத யுகம் 
3600 தேவ வருடம் -திரேதா யுகம் 
2400 தேவ வருடம் -துவார யுகம் 
1200 தேவ வருடம் -கலியுகம் 

கிருத யுகம்     -1728000   மானுட வருடங்கள் 
திரேதா யுகம் - 1296000  மானுட வருடங்கள் 
துவாரயுகம்    - 864000    மானுட வருடங்கள் 
கலியுகம்         - 432000     மானுட வருடங்கள் 

21600*80  -கிருதயுகம்(சத்திய யுகம்)
21600*60  -திரேதா யுகம்
21600*40  -துவாரயுகம்(மகாபாரதம் நடந்த யுகம் )   
21600*20  - கலியுகம்

கலியுகம் துவங்கி 5114 வருடம் ஆகிறது 

ஸ்ரீ கிருஷ்ணன் மகாசமாதி ஆன நாள் கலியுகத்தின் துவக்க நாள் அதாவது B .C 3102 பிப்ரவரி 18ஆம் நாள்
வெள்ளிகிழமை என்பது ஆரிய பட்டர் கணக்கு    

இந்த நான்கு யுகம் சேர்ந்தது ஒருசதுர்யுகம்(அ)மகாயுகம் எனப்படும் 

இப்பொழுது நடப்பது 28ஆவது மகாயுகம் இதில் 
கிருதயுகம் திரேதாயுகம் துவாரயுகம் முடிந்து கலியுகம் நடக்கிறது

இராமாயணம் நடந்தது 26ஆவது மகாயுகம்

ஸ்ரீ ராமனுக்கு அகத்தியர் சிவகீதை உபதேசித்து 
சிவதீட்சை செய்து வைத்துள்ளார் 

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு  உபமன்யு முனிவர் சிவதீட்சை செய்து வைத்துள்ளார்

அதாவது 12000 தேவ வருடங்கள்  
4320000 மானுட வருடங்கள்
1000 சதுர யுகம்  பிரம்மாவின் ஒருநாள் பாதி (பகல் )
1000 சதுர யுகம்  பிரம்மாவின்  இரவுகாலம்
பிரம்மாவின் பகல் காலம் -படைப்பு 
பிரம்மாவின் இரவு காலம் -பிரளய காலம் இக்காலத்தில் இந்திரனோ மனிதர்களோ தேவர்களோ யாரும் இருக்கமாட்டார்கள் அனைத்து உயிர்களும் இறைவனிடம் (சிவன் )ஒடுங்கும். பிரம்மா இரவில் தூங்கி எழுந்து பகல் பொழுதில் 
படைப்பை  தொடங்குவார் பிரம்மாவின் ஆயுள் 
நூறு ஆண்டுகள் ஆகும் போது மகாபிரளயம் 
ஏற்பட்டு பிரம்மாவும் இறைவனிடம் ஒடுங்குவார்

பிரம்மாவின் ஒரு நாள் கணக்கில் 14 இந்திரர்கள் ஆள்வார்கள்

540000 இந்திரர்கள் வந்து போகும் காலம் விஷ்ணுவுக்கு ஒரு நாள் 
விஷ்ணுவின் ஆயுட்காலம்  ருத்ரனுக்கு ஒரு நாள் 

ஏன் இந்த காலக்கணக்கு தெரியுமா ? இராமாயணம் நடந்தே இரு மகாயுகம் ஆகின்றது அப்போதே சிவவழிபாடு இருந்திருக்கிறது அப்போ சைவத்தின் 
காலத்தை அளவிடமுடியுமா ?

நேற்று பிறந்த சமயங்களின்  வயதை கணக்கிடலாம் சைவ சமய காலத்தை வரையறுக்க இயலுமா ?
சிவபெருமான் உலகைப் படைத்த காலத்தையோ வேதங்களையும் ஆகமங்களையும் படைத்ததையோ திரிபுரம் எரித்ததையோ தக்கனின் யாகம் அழித்ததையோ விஷ்ணுவும் 
பிரம்மாவும் அடிமுடி தேடியதையோ இன்று உள்ள காலக்கணக்கில் சொல்ல முடியுமா? சிவபெருமான் நஞ்சு உண்ட காலம் சொல்ல முடியுமா?

எண்ணுடை மூவர்இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தைகடைத்தலைமுன் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர்எத்தனையோ பிரமர்களும்
மண்மிசை மால்பலர்மாண்டனர்காண் தோணோக்கம்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருத்தோணோக்கம் 9ஆவது பாடலில் மேற்சொன்னவற்றை பாடுகிறார் 

சிவன் அநாதி சைவம் அநாதி என்பது இதை கணக்கில் கொண்டுதான் தந்தை தாய் இல்லாத அனாதை என்ற அர்த்தத்தினால் அல்ல

A .C என்றோ B.C என்றோ கால கணக்கு சொல்ல
என்ன அருகதை உள்ளது? 

இந்த கணக்குகள் எப்படி கணக்கிடப்பட்டது என்றால் நம் முன்னோர்கள் தாங்கள் செய்யும் சுப அசுப காரியங்களுக்கு அன்றுள்ள நேரம் காலம் இடம் ஆகியவற்றை குறிப்பிடாமல் செய்ததில்லை  சங்கல்பம் செய்யும் போது கீழ் கண்டவாறு  இடம், அயனம், பருவம் ,மாதம்,பட்சம், திதி,நட்சத்திரம்    முதல் சகல சங்கதிகளையும் தவறாது  சொல்வார்கள் அதை வழி வழியாக பின் தொடந்து வந்ததில் இருந்து கணக்கிடப்பட்டிருக்கிறது 

மாதிரிக்கு சங்கல்பத்தில் என்னவெல்லாம்   சொல்வார்கள்  என்பதையும் அதில் கலியுகே பெரிய எழுத்தில் காட்டப்பட்டிருக்கிறது 



சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீயபரார்த்தே, ச்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலி யுகே, ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோர்& தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே, ப்ரபவாதி& ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ( )நாம ஸம்வத்ஸரே, ( )அயனே, ( )ருதௌ, ( )மாஸே, ( )பக்ஷே, ()சுபதிதௌ, ( )வாஸரயுக்தாயாம், ( )நக்ஷத்ர யுக்தாயாம், சுபயோக சுபகரண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சுப திதௌ,
மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம், அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச்வர்ய அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம், உசிதகாலே ஆயுஷ்மத்ஸுரூப சுகுணபுத்ர அவாப்த்யர்த்தம், தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், அரோக திடகாத்ரதா ஸித்யர்த்தம் ஸ்ரீ வரலக்ஷ்மி ப்ரஸாத ஸித்த்யர்த்தம், யாவச்சக்தி த்யான&ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜாம் கரிஷ்யே|


                                                போற்றி ஓம் நமசிவாய


                                                     திருச்சிற்றம்பலம்  

1 comment: