rudrateswarar

rudrateswarar

Tuesday, April 30, 2013

பிறவி என்னும் பிணி

                                               ஓம் நமசிவாய

பிறவி என்னும் பிணி 

பிணி என்ற சொல்லுக்கு உரைநடையில் நோய் வியாதி என்ற பொருள் சொல்வோம் ஆனால் இலக்கியத்தில் உள்ள பிணி என்பதன் 
பொருள் வேறு. எப்படி?

வியாதி நோய் போன்றவை மருந்து சாப்பிட்டால் தீரக்கூடியவை ஆனால் பிணி என்பது தீராதது மருந்து சாப்பிட்டால் அப்போதைக்கு தீரும் ஆனால் திரும்ப குறித்த காலத்தில் உடனே திரும்ப வரும் அது என்ன?
ஒன்று பிறப்பு இன்னொன்று பசி. மணிமேகலை பசியை பிணிஎன்றேகூறுகிறது  பசிப்பிணி தீர்க்கஅட்சயபாத்திரம்பெற்றாள் மணிமேகலை  என்பது இலக்கியம்.பசியானது உணவு உண்டதும் போய்விடும் ஆனால் சிறிது கால இடைவெளியில் திரும்ப வந்துவிடும்  அது போலவே பிறவியும் ஒருவகையில் பிணியே ஏனெனில்இப்போது இருப்போம் இறப்போம். மீண்டும் பிறப்போம் மீண்டும் இறப்போம் அதனால் தான் பெரியவர்கள் பிறவியை பிணி என்றனர் 
திரும்ப திரும்ப வரும் இந்த பிறவிப்பிணியை தீர்க்க ஐந்தெழுத்து மந்திரமும் திருநீறுமே மருந்தாகும் கூன்பாண்டியனின் வெப்புநோய்   மட்டுமல்ல கூன் நிமிர்த்தியதும் இந்த அருமருந்தாம் திருநீறே .பல சிவாலயங்களில் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்து என்று திருநீற்றுக்கோயில் வைத்துள்ளார்கள்   


பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்


என்று சம்பந்தர் 3ஆம் திருமுறையிலும்  

 மருந்தின னேபிற விப்பிணிப் பட்டு மடங்கினர்க்கே
 
8ஆம் திருமுறை நீத்தல்விண்ணப்பம் பாடல் 18


தாதாய் மூவே ழுலகுக்குந்
      தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே


8ஆம் திருமுறை புணர்ச்சிப்பத்து பாடல் 9 

என்று மாணிக்கவாசக சுவாமிகள் 8ஆம் திருமுறையிலும் பாடியுள்ளார்கள். ஆகவே தீராத இந்த பிணியை தீர்க்கும் அருமருந்தை  நாம்  வருமுன் எடுத்துக் கொண்டு  காப்போம்



                         போற்றி ஓம் நமசிவாய 


                               திருச்சிற்றம்பலம்  



No comments:

Post a Comment