rudrateswarar

rudrateswarar

Friday, April 12, 2013

அப்பாலும் அடிசார்ந்தார் புராணம்

                                    ஓம் நமசிவாய


அப்பாலும் அடிசார்ந்தார் புராணம்

             "அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்"


குருபூசை நாள் -பங்குனி கடைசி நாள் 
13-04-2013 சனிக்கிழமை 


மூவேந்தர்களின் தமிழ் நாட்டிற்கு அப்புறத்தில் உள்ள நாடுகளில் வாழ்ந்து சிவனடி சார்ந்தவரும் திருத்தொண்டத் தொகை பாடும் காலத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்த அடியார்கள் அப்பாலும் அடி சார்ந்தார் ஆவார் 

தமிழ் வழங்காத நாட்டில் உள்ள அடியார் அப்பாலும் அடிசார்ந்தார் ஆவர்.

அப்பால் என்பது இடத்தாலும் காலத்தாலும் அப்பால்

சைவ சமயம் தேசத்தாலும் காலத்தாலும் கட்டுப்படாதது  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் கூறுவதில் இருந்து அறியலாம் .அடியார்கள் எங்கிருந்தாலும் எந்நாளும் 
அவர்களைப் போற்றி வணங்கி சிவப்பேறு பெறுவோம்

                           

                                                      போற்றி ஓம் நமசிவாய 


                                                          திருச்சிற்றம்பலம்
  

No comments:

Post a Comment