rudrateswarar

rudrateswarar

Saturday, April 13, 2013

தில்லை வாழ் அந்தணர் புராணம்

                                                            ஓம் நமசிவாய


தில்லை வாழ் அந்தணர் புராணம்

     "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்"

குருபூசை நாள் -சித்திரை முதல் நாள் 
14-04-2013 ஞாயிற்றுக்கிழமை

கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருசிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி

செந்தமிழின் பயனாய் உள்ள திருத் தோண்டத் தொகை  பாட வன்தொண்டர்க்கு ஆணையிட்டு அடி எடுத்துத் தந்த திருவாரூர்த் தியாகேசப்பெருமான் தொடக்கம் செய்து தந்த முதல்  அடிதில்லைவாழ்  அந்தணர்  தம் அடியார்க்கும் அடியேன் . அப்படி எம்பெருமானேஅந்தணர்கள் பெருமையை உலகுக்கு உணர்த்த அடியெடுத்துக் கொடுத்தார்
என்றால் அவர்களின் சிறப்பு தான் என்னே

மற்ற தொகை அடியார்கள் குரு பூசை பங்குனி கடைசி நாளாகும்
அதுபோல தில்லைவாழ் அந்தணர் குரு பூசை சித்திரை முதல் நாளாகும்
சித்திரை முதல் நாள்  ஆலயத்திற்கு செல்லும்போது இந்த குரு பூசையில் கலந்துஇறைவன்  அருள் பெறுவோமாக



                              போற்றி ஓம் நமசிவாய 

                                   திருச்சிற்றம்பலம்
 

1 comment: